அப்படி வறுத்தெடுக்க திமுகவில் இப்பொழுது யாராவது உண்டா

கட்சியில் இருந்து கொண்டு யாராவது கட்சி கொள்கைக்கு விரோதமாக கோவில் வழிபாடு இன்னபிற காரியங்களில் இறங்கிவிட்டால் கலைஞர் தனக்கே உரித்தான சில வார்த்தைகளை வைத்து காய்ச்சி எடுப்பார்.

கோடாரி காம்பு, விபீஷ்ணன் மற்றும் பிரகலாதன் போன்ற தேர்ந்த வார்த்தைகள் அவை

அண்ணா காலத்தில் இருந்து இறுதிகாலம் வரை அப்படித்தான் இருந்தார்.

சுக்ரீவன், விபீஷ்ணன், பிரகலாதன் எல்லாம் அவருக்கு பிடித்தமான வார்த்தைகள். அந்த புராணங்களை நம்பமாட்டாரே தவிர அந்த பாத்திரங்களின் குணாதிசயத்தை மனமார ரசிப்பார், விடவே மாட்டார்.

ஆனால் துர்கா ஸ்டாலினையும், ராசாத்தி அம்மாளையும் அப்படி வறுத்தெடுக்க திமுகவில் இப்பொழுது யாராவது உண்டா என்றால் இல்லை

பொது இயக்கத்துக்கும் தனியார் கம்பெனிக்கும் உள்ள வித்தியாசம் அதுதான்.