“தேசம் போச்சி.. தேசம் போச்சி”
தேசம் காந்திகொலை, பாபர் மசூதி இடிப்பு போன்ற கொடுங்காலங்களுக்கு திரும்பியது போன்றே தெரிகின்றது
ராமனின் பெயரை சொல்ல சொல்லி ஒரு சிறுவனை அடித்து கொன்றிருக்கின்றார்கள், அருகே சோகமாக அமர்ந்திருக்கின்றார் தந்தை
தசரதனுக்காவது மகன் திரும்ப வந்தான், இவருக்கு அவன் மகன் வருவானா?
ராமனின் பெயரை சொல்லி தசரதனின் சோகத்தினை அடுத்தவருக்கு கொடுக்கும் கும்பலை அனுமதிக்கமுடியாது.
இந்த சிறுவன் இந்தியனாய் பிறந்தது சரி ஆனால் இந்துவாய் பிறக்கவில்லை அதனால் வாழ தகுதியற்றவன் என்ற தீர்ப்பினை எழுதும் அதிகாரம் யார் கொடுத்தது?
எல்லாம் ஆள்வது நம்கட்சி எனும் நம்பிக்கை கொடுத்தது
மிசா காலத்தில் காமராஜர் சொன்ன அந்த வார்த்தைகள்தான் காதோரம் ஒலிக்கின்றது
“தேசம் போச்சி.. தேசம் போச்சி”
