குஜராத்துக்கு ஒரு நீதி, கோவைக்கு தனி நீதி..
தமிழகத்தை குஜராத்திகள் அழிக்கின்றார்கள், எல்லா தொழிலும் அவர்கள் கைக்கு சென்றாயிற்று என்றொரு கோஷ்டி கிளம்பிவிட்டது
இந்த ஜவுளிகடை கோஷ்டி மட்டும் இதுபற்றி வாய்திறக்குமா என்றால் திறக்காது
எட்டடுக்கு மாடியும் முழுக்க ஏசியும் முகலாய மன்னர்களை போன்ற பாங்குமாய் தமிழக ஜவுளிகடைகள் எப்படி ஜொலிக்கின்றன?
குஜராத்திய மில்கள் கொடுக்கும் லாபம் அது
மிக சல்லி விலையில் அவை அள்ளிவிடுகின்றது, அது இங்கு கொள்ளை விலைக்கு விற்கபடுகின்றது
தமிழக ஜவுளிகடைக்காரர்கள் கொழிக்க குஜராத் செய்துகொண்டிருக்கும் சேவை கொஞ்சம் அன்று
எதற்கெடுத்தாலும் குஜராத் என் ஒப்பாரி வைப்பவர்கள் இதை எல்லாம் மறந்துவிடுவார்கள் என்பதுதான் சோகம்
இது வியாபார உலகம்
அந்த நோக்கில் பார்க்க போனால் தமிழக விவசாயிகள் பணமெல்லாம் மோட்டார் பாகங்கள் என கோவை கம்பெனிகளிடமே குவிந்து கிடக்கின்றன
கோவை மின்மோட்டார் கம்பெனிகளால் விவசாயி பாதிக்கபடுகின்றான் என எவனாவது சொல்லட்டும் பார்க்கலாம்
மாட்டான்..
குஜராத்துக்கு ஒரு நீதி, கோவைக்கு தனி நீதி..