நாடு மிக ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டது போல் தெரிகின்றது
நாடு மிக ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டது போல் தெரிகின்றது
ஆர்.எஸ்.எஸ் ராணுவபள்ளி தொடங்கபோவதாக சில தகவல்கள் வருகின்றன, உபியில் தொடங்குவார்களாம்
இதில் ராணுவத்தினர் பயிற்சி கொடுப்பார்களாம், பின் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ராணுவத்தில் சேர்வார்களாம்
ராணுவம் என்பது ஜாதி மதம் இனத்திற்கு அப்பாற்பட்டதாக இருத்தல் வேண்டும், சொந்த இனம் என்றால் சுடு என்றால் சுடும் அமைப்பாக இருக்க வேண்டும்
ராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் ஊடுருவுமானால் அது மிகபெரிய குழப்பத்தை ஏற்படுத்தி தேசத்தை வலுவிழக்க செய்யும்
இதெல்லாம் மகா கவலையளிக்கும் விஷயங்கள், மனம் மிக கடுமையாக அஞ்சுகின்றது
இதை உடனே கைவிட்டால் நல்லது, எங்கள் நாடு எங்கள் அரசு எனும் மனதையில் திரிவார்களானால் மாபெரும் குழப்பத்தை இந்தியா சந்திக்கும்
அதை கண்ணீரோடு எச்சரிக்கின்றோம்
அன்றொரு நாள் இன்றைய பலுசிஸ்தானில் இருந்து கான் அப்துல் கபார்கான் என்றொரு இந்தியன் பிரிவினையின் பொழுது கதறிகொண்டிருந்தான்
நாங்கள் இந்தியர்கள் மதத்தின் பெயரால் எங்களை பிரிக்காதீர்கள், நாங்கள் தொடர்ந்து இந்தியனாக வாழ ஆசைபடுகின்றோம் என கதறி கதறி கேட்டுகொண்டிருந்தான்
அதை கொஞ்சமும் காதில் வாங்காமல் நீ பாகிஸ்தானி என விரட்டினார்கள்
இனி நம்மையும் அப்படி விரட்டுவார்கள் போலிருக்கின்றது
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பது இதுதான்
ஆனால் இதையும் தாங்க ஏது இதயம்?
பெரும் நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்து மனம் வெறுத்துவிட்ட நேரமிது