பைபிள் ஒரு சமூக நீதி நூல் ?
பைபிள் ஒரு சமூக நீதி நூல் என இந்த எஸ்ரா சற்குணம் சொல்வதை வன்மையாக கண்டிக்கின்றோம்
அது யூதரில் உள்ள வறுமைபட்டவர்களை அடிமைபடுத்தபட்டவர்களை சொல்லுமே தவிர மற்ற இனத்தை புற இனத்தவர் என சொல்லிவிடும்
ஒவ்வொரு யூதனும் காலை எழும்பி சொல்லும் நன்றியில் “நான் புற இனத்தானாக பிறக்காததுக்கு நன்றி” என்பது குறிப்பிடதக்கது.
ஆம் பழைய ஏற்பாடு முழுக்க யூதருக்கும் அவர் இனத்துகுள்ளான சிக்கலை சொன்னது.
யூதரை தாண்டி அது ஏதும் சொல்லாது, முழுக்க யூதருக்கான வரலாறு கட்டளை தண்டனை அவர்கள் சம்பந்தபட்ட அரசன் இவையேதான் பைபிள்
புதிய ஏற்பாடும் அப்படியே, ஏன் இயேசு கூட இஸ்ரேலை அடுத்து ஒரு அங்குலம் செல்லவில்லை, இஸ்ரேலை தாண்டி அவர் கால் வைத்த இடம் சமாரியா
சமாரியா என்பது கலப்பு யூத இனம் என்பதால் ஒரிஜினல் யூதர்கள் அவர்களை விலக்கி வைத்தார்கள், இயேசு அவர்களிடம் அவர்கள் பழைய யூதர் என்பதற்காக சென்றார்
மற்றபடி யூதர் சமாரியரிடம் பழக மாட்டார்கள்
“இவனும் ஆபிரகாமின் மகனே” என சொல்லி சமாரியனை அணைத்தார்
யூதர் இயேசுவினை கொல்லதேடிய காரணத்தில் இதுவும் ஒன்று
இயேசுவும் சாமானியர் அல்ல, ஒரு புற இனத்துபெண் தன் மகளுக்காக வேண்டும்பொழுது “பிள்ளைகளின் உணவு நாய்களுக்கு அன்று” என முகத்தில் அடித்து சொல்கின்றார்
ஆம் நான் யூதர்களுக்கானவன் என்பது அவரின் கணக்கு
“இஸ்ரேலியருக்குள் காணாமல் போனவர்களுக்காக அனுப்பபட்டேன்” என பட்டவர்த்தனமாக தன் யூதவெறியினை சொன்னவர் இயேசு
அவர் வறுமையுற்றோர், ஒடுக்கபட்டவர் என சொன்னதெல்லாம் யூதமதத்தில் ஒடுக்கபட்டவரை சொன்னாரே அன்றி மற்ற இனத்தாரை பற்றி எங்கே கவலைபட்டார்?
கடைசிவரை யூதனாக இருந்தார், அந்த யூதவெறிதான் சிலுவையிலும் யூதருக்காக ஜெபிக்க சொன்னது
கிறிஸ்தவம் பின்பு இயேசுவின் சீடர்களால் உலகில் பிற இனத்துக்கு சொல்லபட்டதே அன்றி இயேசு இருக்கும் பொழுது அல்ல
இயேசு வாழும் பொழுது அவர் சீடரை யூதருக்குள் மட்டுமே அனுப்பினார், குழப்பம் இயேசு இறந்தபின் வந்தது
அதுவும் முதலில் யூதருக்குத்தான் கிறிஸ்தவம் சொல்லபட்டது பின்பு ஏதோ தரிசனம் கண்டு எல்லொருக்கான கிறிஸ்தவமாக அது மாறியதாக சீடர்களே சொல்லிகொண்டார்கள்
வாழும்பொழுது சொல்லாத இயேசு அவர் இறந்து உயிர்த்தபின்புதான் மற்ற மக்களை நினைத்துபார்க்க சொன்னாராம்
பைபிளை படித்தவர்கள் சொல்வார்கள், அது யூதருகுள்ளான சமூகத்தை பற்றி பேசியதே தவிர யூதர் அல்லாத மக்களை புற இனத்தவர் என ஒதுக்கியே வைத்தது
அந்த பைபிளை சமூக நீதிக்கான நூல் என எஸ்ரா சொல்வாராகில் அது பச்சை பொய்களில் ஒன்று