ஹம்சாபின்லேடன்
கடன், பகை, நெருப்பு இந்த மூன்றிலும் கொஞ்சமும் விட்டு வைக்காதே, முடிக்கும் பொழுது மொத்தமாக முடித்துவிடு என்பது சாணக்கிய நீதி
அந்நாளைய மன்னர்கள் பகைவரை குடும்பத்தோடேதான் முடிப்பார்கள், அவ்வளவு ஏன் இலங்கை ராணுவமும் பிரபாகரனுக்கு அதைத்தான் செய்தது
அப்படியாக பின்லேடனின் வம்சத்தை குறிவைத்தது அமெரிக்கா, தந்தைக்கு வழிவாங்க யாராவது அலைகின்றார்களா என அது தேடிகொண்டே இருந்தது
ஒசாமா பின்லேடனுக்கு மனைவியர் அதிகம், வாரிசுகளும் அதிகம்
அதில் ஒருவர் ஹம்சாபின்லேடன் தந்தைவழியில் தீவிரமாக இருந்தார்
31 வயதாகும் ஹம்சா லேடன் அல்மான் அல்ஜவஹரியுடன் இணைந்து அல்கய்தாவினை நடத்தியதாக சொல்லபட்டது
ஹம்சா அமெரிக்காவுக்கு ஏன் ஆபத்தானவர் என்றால் பின்லேடனின் முதலீடுகள் உட்பட அல்கய்தாவுக்கான வருமான மூலம் அறிந்தவர் என்பதால் மிக பெரும் பலத்தை அவரால் கொடுக்கமுடியும் என அஞ்சியது குறிவைத்து தேடியது
இப்பொழுது அவர் கொல்லபட்டுவிட்டார் என அறிவிக்கின்றது
ஆனால் எங்கு எப்படி கொன்றார்கள் என சொல்லவில்லை, உடலையும் காட்டவில்லை
செய்தியினை அல் கய்தா இன்னும் மறுக்கவில்லை என்பதால் எங்கேயோ ஏதோ நடந்திருக்க வாய்ப்பு உண்டு
உலகெல்லாம் இது வாரிசுகளுக்கு சோதனையான காலம்
ராகுல், குமாரசாமி, முக ஸ்டாலினை போலவே எல்லா துறை வாரிசுகளும் படாதபாடுபடுகின்றன
