கொடூர வில்லன் உபி பாஜகவில் இருந்திருக்கின்றான்
தமிழ்படத்தினை உபி, மபி ஏரியாக்களை பார்த்து எடுப்பார்களா? இல்லை உபி மபி ரவுடிகள் தமிழ் சினிமா பார்த்து ரவுடியிசம் பழகுவார்களா என்பது பட்டிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது
தமிழ் சினிமா அளவு கொடூர வில்லன் உபி பாஜகவில் இருந்திருக்கின்றான் அவன் பெயர் குல்தீப்சிங் சென்கார், இயக்குநர் ஹரி படங்களில் வருவது போலவும் பழைய வில்லன் சத்தியாஜ் போலவும் பெரும் வில்லனாக இருந்திருகின்றார்
பெண்ணை கற்பழித்தது அவள் நியாயம் கேட்டதும் கொலை முயற்சி, குடும்பத்த்தை மிரட்டியது என ஏகபட்ட கொடூரங்களை அவர் செய்திருக்கின்றார்
ஆனால் தமிழ்படத்தில் வருவது போல விஜய், அஜித் , விஜயகாந்த், அர்ஜூன், சத்யராஜ்,விஷால் போன்ற ஹீரோக்கள் அங்கு காக்க வரவில்லை
பெரும் அச்சுறுத்துலக்குள்ளான பெண் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கே கடிதம் எழுதிவிட்டாள்
அதிர்ந்த உச்ச நீதிமன்றம் இன்னும் இங்கு நீதி சாகவில்லை என சொல்லி வழக்கினை டெல்லிக்கு மாற்றியிருக்கின்றது
விஷயம் சொல்வது இதுதான்
பாகிஸ்தானின் வர்சிஸ்தான் பலுசிஸ்தான் போல ஒருவித காட்டுமிராண்டி பகுதியாக எதற்கும் கட்டுபடாத பிரதேசமாக உபி ஏரியா விளங்குகின்றது
அங்கு ஆளும் அந்த மொட்டை சாமி யோகி என்பவர் பாஜகவினரின் அடாவடிகளை கண்டிக்க தயங்குகின்றார் அல்லது முடியவில்லை
வாக்கு ஒன்றிற்காக பாஜகவின் அதிகார பீடமான மோடி அமித்ஷா போன்றோர் நடவடிக்கைக்கு பதில் கனத்த மவுனம் காக்கின்றனர்
அந்த கோஷ்டிகள் எப்படி அடாவடி செய்தாலும் இந்நாட்டில் நீதி கிடைக்காமல் போகாது என்பதும் நோக்க வேண்டிய விஷயம்
இதில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்
பாஜக அமுக்கமுயன்ற சிக்கலை காங்கிரஸும் திமுகவும் பாராளுமன்றத்தில் கொதித்தெழுந்து அணலை கக்கியது
அந்த அதிர்வும் உச்சநீதிமன்றத்தின் அவசர நடவடிக்கைக்கு ஒரு காரணம்
தமிழகத்தை தாண்டி வடக்கே எந்த பெண்மணிக்கு என்றாலும் அது திராவிட பெண்மணி தமிழச்சியாக இல்லை என்றாலும் திமுக காக்க தயங்காது என்பது தெரிகின்றது
இதுபற்றி உதயநிதி என்பவரிடம் அகில இந்திய பெண்களை காக்க கிளம்பிவிட்ட பின் திராவிட அடையாளம் கட்சிக்கு ஏன்? அதை உடனடியாக மாற்றி “அகில இந்திய முன்னேற்ற கழகம்” என பெயரிட்டால் என்ன என கேட்டுவிடலாமோ?
அது இருக்கட்டும்
சில நாடுகள் தமிழ்படங்களை தடை செய்துவிட்டன, அதில் கட்டுகடங்கா வன்முறையும் கொடூர வில்லத்தனமும் காட்டபடுகின்றதாம் அது சில நாட்டு இளைய தலைமுறையினை பாதிக்கின்றதாம்
குற்ற செயல்களை விசாரிக்கும் அந்நாட்டு காவல்துறை, தமிழ்படங்களை பார்த்து இக்குற்றத்தை புரிய தூண்டபட்டாதாக குற்றவாளிகள் சொன்னதை கேட்டு அதிர்ந்து அரசுக்கு கொடுத்த அறிக்கையின் வெளிப்பாடு அவை
இனி உபி அரசும் அப்படிசொல்லுமோ? சொல்லிவிட்டால் தமிழகம் தாங்குமா?
தமிழ் படத்தால் உபியில் வன்முறை அதிகரிப்பு என யொகி சொல்லிவிட்டால் எப்படி இருக்கும்? சொல்லமாட்டார் என நம்புவோம்
எது எப்படியோ? நாம் சொல்லிவிட்டோம் அல்லவா? சும்மாவே தமிழ் நடிகர்கள் மேல் கடுப்பாய் இருக்கும் பாஜகவினர் குறிப்பாக தமிழிசை அக்கா இனி ஒரு படத்தை விடுவாரா?
நல்ல வேளையாக சூர்யாவின் அயன் படம் முன்பே வந்தது, இனி வந்தால் கடத்தலை சொல்லிகொடுக்கும் படம் என சூரியாவினை வறுத்து உள்ளே அடைத்தாலும் அடைத்திருப்பார்கள்
நெஞ்சினிலே, போக்கிரி போன்ற படங்கள் வந்தால் விஜய் நிலை அவ்வளவுதான் , ஏன் கமலஹாசனே இன்னொரு நாயகனை நினைத்துபார்க்க முடியாது. வன்முறை வளர்ப்பு படம் என பொசுக்கிவிடுவார்கள்
இனி ஒரு சூர்யா , விஜய் படம் வன்முறை, கடத்தல் என வரட்டும், தமிழக பாஜக விட்டுவிடுவதை பார்த்துவிடலாம்..