உலகெல்லாம் இஸ்லாமிய பெண்களுக்கு நற்செய்தி
உலகெல்லாம் இஸ்லாமிய பெண்களுக்கு நற்செய்தி கிடைத்து கொண்டிருக்கும் நேரமிது
இந்தியா முத்தலாக் விவகாரத்திற்கு கடிவாளம் போட்டது, இதற்கு உலகளாவிய இஸ்லாமிய பெண்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது தமிழக இஸ்லாமிய பெண்கள் தவிர
காரணம் நல்ல சட்டம் கொண்டுவந்தாலும் திமுகவும் காங்கிரசும் கொண்டுவர வேண்டும் பாஜக எது கொண்டுவந்தாலும் ஏறேடுத்தும் பாரோம் என்பது அவர்களின் 6ம் கடமைகளில் ஒன்று
அது இருக்கட்டும்
இப்பொழுது சவுதி அரேபியா இதுகாலம் இருந்த பெண்கள் மேலான கட்டுபாடு ஒன்றை தளத்துகின்றது, இதுவரை சவுதி பெண்கள் ஆண் துணை அல்லது அனுமதியின்றி வெளிநாடு செல்ல கூடாது
இனி அப்படி அல்ல அவர்களை பட்டாம் பூச்சியாக பறக்கவிடுகின்றோம், 21 வயது நிரம்பிய எந்த சவுதி பெண்ணும் கிளம்பலாம் யாரின் அனுமதியும் தேவையில்லை என்கின்றது சவுதி
சவுதி பெண்களுக்கு இது உற்சாகம் அளிக்கும் செய்தியாயிற்று , இந்த அரசர் அவர்களுக்கு பல உரிமைகளை கொடுத்து கொண்டிருக்கின்றார்
நல்ல வேளையாக சவுதி தூதரகம் தமிழகத்தில் இல்லை, இருந்திருந்தால் இந்நேரம் சவுதி அரசருக்கு “பெரியார் விருது” என ஒரு கோஷ்டி சவுதி தூதரகம் நோக்கி கிளம்பியிருக்கும்
