அவர் அப்படித்தான்
தமிழ் திரைப்படங்களில் மகா வித்தியாசமான அதேநேரம் கிளாசிக் எனப்படும் ரகத்தின் படம் “அவள் அப்படித்தான்”
அதில் ருத்தையாவின் வசனங்களை ரஜினி இப்படி பேசுவார் , ரஜினி அப்பொழுது வில்லன் நடிகர்
“டேய் மச்சான், பெண்கள் மேல வெறுப்பு வந்த அன்னைக்கே நான் செத்துருவேன், அதுக்கப்புறம் என்னடா வாழ்க்கை?
பெண்ணை அனுபவி ஆராயாதே..பெண்ணை தேடு அவள் இதயத்தை தேடாதே
அவா உன்னை தொடரட்டும், நீ அவளை தேடாதே
பெண்ணிடம் ஏமாறாதே.. பெண்ணுக்காகவும் ஏமாறாதே,
பொண்ணுங்க இல்லாம வாழவே கூடாது, அதே நேரம் பொண்ணுக்காகவும் வாழகூடாது
நதிமாதிரி நாம ஓடிகிட்டே இருக்கணும், நீ இல்லண்ணா வாழமுடியாதுன்னு மீன் மாதிரி அவளுகளா நம்மகிட்ட நீந்தணும், நாமளாக தேடி போகவே கூடாது”
இந்த வரிகளுக்கு அகில உலக சாட்சியாக வாழும் ஒரே மகான் நித்தி சாமி
எத்தனை அத்திவரதர் வந்தாலும் நித்திவரதரின் ஆட்சியும் ஆசியுமே தனி..
“அவர் அப்படித்தான்..”
