கலைஞருக்கு முதல் வருட அஞ்சலிக்கு என்ன ஏற்பாடு?
எலேய் கலைஞருக்கு முதல் வருட அஞ்சலிக்கு என்ன ஏற்பாடு?
அண்ணாச்சி கோவில்ல பிரார்த்தனை, 50 பேருக்கு சாப்பாடு அப்புறம் படத்த்துக்கு மாலை போட்டு அஞ்சலி, நீரு 10 நிமிஷம் ஒழுங்க பேசணும், இல்லண்ணா அன்னைக்கு உமக்கு நினைவுநாளா ஆயிரும்
அதெல்லாம் சரிடா, துர்கா ஸ்டாலின் திதி ஏதும் குடுத்தா சிக்கலாகுமேடா?
அண்ணாச்சி, என்ன மனுஷன் நீரு, வரலாறு தெரியுமா தெரியாதா?
சொல்லுய்யா
பெரியார் பெரிய நாத்திகர், ஆனா அவரோட முதல் மனைவியும் அம்மாவும் அப்படி பக்திமான், ஒருவார்த்தை பெரியார் அவங்கள கண்டிச்சாரா?
இல்லை
அதான் அண்ணாச்சி பெரியார் வழி, தளபதி அந்த வழி அண்ணாச்சி. அவர் கொள்கை வேற அத யார் மேலயும் திணிக்கமாட்டாரு, வாழும் பெரியார் தளபதி அண்ணாச்சி
ஓஹோ பெரியார் மாதிரி காஞ்சிபுரம் கோவில் தர்மகர்த்தா பதவி கொடுத்தா ஸ்டாலின் ஏத்துப்பாரா?
அண்ணாச்சி ஆட்சி கவிழ்ந்து தளபதி சீக்கிரம் முதல்வராயிருவாரு, அப்புறம் அறநிலையதுறையே தளபதிக்கு கீழே, பூரா கோவிலுக்கும் அவர்தான் தர்மகர்த்தா
ஆமாடா
அதுதான் அண்ணாச்சி திமுக, கோவில் வேண்டாம் என சொல்லவே இல்லை ஆனால் கொடியவர்கள் கூடாரம் ஆகிவிட கூடாது என்பதுதான் கலைஞர் கொள்கை
என்ன கொள்கையோடா, சரி 8ம் தேதி மொட்டை ஏதும் போடுவியா ,கதறி கதறி அழுவியா?
அண்ணாச்சி கலைஞருக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை, தெய்வம் நம்மளோட வாழ்ந்த காலம் அவர் வாழ்க்கை அவ்வளவுதான் தளபதி உருவில அவர் வாழ்ந்துட்டே இருப்பார்
அப்புறம் உதயநிதி உருவுல வாழ்வாரு அப்படித்தானே?
சங்கி சகவாசம் அப்படித்தான் பேசவைக்கும், ஒழுங்கா 8ம் தேதி பேச வந்திரும் இல்லண்ணா உமக்கும் அது நினைவுநாளா ஆயிரும்
அப்படியா
நாங்க சொல்றதைத்தான் செய்வொம், செய்வதைத்தான் சொல்வொம்