தமிழ் சினிமா கொலைகாரர்களுக்கு வழிகாட்டியிருக்கின்றது

தமிழ் சினிமா யாருக்கு வழிகாட்டுமோ இல்லையோ சில கொலைகாரர்களுக்கு வழிகாட்டியிருக்கின்றது

அதாவது திண்டுக்கல் பக்கம் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கின்றது, வழக்கம் போல அதன் தொடக்கம் காதல் தான்.

அப்பெண்ணுக்கு 18 வயது இருக்கலாம், அதுதானே அறியா காதல் பூக்கும் பருவம், அவளுக்கும் பூத்தது

பூத்தது சிக்கல் அல்ல, ஆனால் நம்பகூடாதவன் மேல் பூத்ததுதான் கொடுமை

ஒருகட்டத்தில் தீரா காதலில் அவன் வீட்டுக்கே சென்றுவிட்டாள் அந்த அபலை, தன்னை நம்பி வந்தவள் என்று கூட பாராமல் அவளை திருமணம் செய்ய மறுத்திருக்கின்றான் அந்த கல்நெஞ்ச கயவன்

ஒருகட்டத்தில் அவள் அங்கேயே இருந்து வற்புறுத்த அவளை கொலை செய்யும் கொடூரமுடிவுக்கு வந்து கொன்றும் விட்டான்

காதலுக்காக காதலன் கையால் சாகும் கொடுப்பினை அவளுக்கு இருந்திருக்கின்றது பாவம்

ஆத்திரத்தில் கொன்றுவிட்டு அதன்பின் படாதபாடு படுவதுதான் அவசரகொலையாளிகள் நிலை

எப்படி பிணத்தை மறைப்பது என குழம்பிய கொலைகாரன் முதலில் அவளின் பிணத்தை சிலரோடு புதைத்திருகின்றான் பின்பு பாபநாசம் பட காட்சி நினைவுக்கு வந்திருக்கின்றது

அவள் உடலை எடுத்து எரித்துவிட்டு நாயை கொன்று புதைத்திருக்கின்றான், எல்லாம் மலையாள இயக்குநர் அல்பொன்ஸ்புத்திரன் ஐடியா

இந்த பெண் காணாமல் போன வழக்கினை விசாரித்த போலீஸ் விசாரிக்க அவளை கொன்று புதைத்தது உறுதியாயிற்று

ஆனால் ஆதாரத்திற்கு தோண்டினால் நாய் உடல் கிடைத்திருக்கின்றது, அவன் பாபநாசம் கமலஹாசன் போல் வெற்றி பார்வை பார்த்திருக்கின்றான்

நம் காவல்துறை என்ன சீருடையில் ஹெல்மெட் போடாதவனை பிடிக்கவா இருக்கின்றது? அவர்களும் பாபநாசம் படம் பார்த்திருப்பார்கள் அல்லவா?

அதற்காக காவல்நிலையத்தை எல்லாம் தோண்டவில்லை மாறாக அவன் வெற்றிபார்வை பார்த்தபின் செவிட்டில் 2 போட்டு இதை எல்லாம் பாபநாசத்தில் பார்த்தாயிற்று என இழுத்து சென்று விசாரித்தால் அவன் அவள் உடலை எரித்ததை ஒப்புகொண்டுவிட்டான்

சினிமா என்பதே இல்லாததை இருப்பதாக காட்டுவது, அதை உண்மை என நம்பி தப்பிக்க நினைத்தால் எப்படி இருக்கும்?

அந்த கொடூரன் சிறையில் என்ன செய்கின்றானோ தெரியாது, காவல்துறை அவனை கடுப்பேற்ற விரும்பினால் பாபநாசம் படத்தினை அடிக்கடி அவனுக்கு போட்டு காட்டலாம்