அங்கிள் சைமன் மட்டும் என்ன நினைப்பார்?
அன்றொரு நாள் இதே தமிழ்நாட்டில் காஷ்மீர பிரிவினைவாத தலைவன் யாசின் மாலிக்கை அழைத்து வந்து கூட்டம் போட்டு என்னவெல்லாமோ பேசிற்று தமிழக பிரிவினை கூட்டம்
இனி ஒரு காஷ்மீரியினை கைவைத்தால் தமிழகம் சும்மா இருக்காது என கர்ஜித்தார் சைமன்
பதிலுக்கு “டமில் சகோதர்க்கு துன்னை நிற்ப்பாது காஷ்மீறி கட்டமை, இலம் கண்டிப்பா கிடைக்ம்” என்றான் யாசின் மாலிக்
இருவரும் கட்டிதழுவினார்கள், இன்னும் என்னவெல்லாமோ உறுதி எடுத்தார்கள்
இன்று யாசின் மாலிக் என்பவன் இருக்குமிடம் தெரியவில்லை
அங்கிள் சைமனிடம் இது என்ன படம் என கேளுங்கள், “ஹிஹிஹி தம்பி அது நம்ம தம்பி ஒருத்தன் நம்ம மேடையில காஷ்மீரி மாதிரி வேடம் போட்டது தம்பி
நாமளாவது யாசின் மாலிக்கை பார்த்ததாவது, பூரா திமுக சதி தம்பி. நம்ம வளர்ச்சியினை தடுக்க பாக்குறானுக
எனக்கு ஆயிரம் வேலை இருக்கு தம்பி, இதுக்கெல்லாம் பதில் சொல்ல நேரமில்லை ஹ்ஹாஹஹ்ஹஹஹ” என சொல்லிவிட்டு ஓடிவிடுவார்.
காஷ்மீர் வளைக்கபட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒரு பயலும் மூச்சே விடவில்லை
யாசின் மாலிக் எங்கிருப்பானொ தெரியாது, ஆனால் ஒருநாள் அங்கிள் சைமனை பிடித்து கடித்தாவது வைத்துவிட வேண்டுமென்று மனதுக்குள் வெறியோடு இருப்பான் என்பது மட்டும் உண்மை
அங்கிள் சைமன் மட்டும் என்ன நினைப்பார்?
காங்கிரஸும் திமுகவும் எவ்வளவு பரவாயில்லை, அவர்களையா திட்டினோம்? இனி அவர்கள் ஆட்சிக்கு வர உழைக்க வேண்டும் என தீர்மானம் எடுத்துகொண்டிருப்பார்