மிக அழகான திட்டமிடல் இது
நிச்சயம் மிக அழகான திட்டமிடல் இது, முதலில் மாநில அரசை முடக்கினார்கள் , ஜனாதிபதி ஆட்சி வந்தது
இதற்கான முயற்சி அந்த புல்வாமா தாக்குதலிலே தொடங்கிற்று என்றாலும் நிதானமாக தேர்தல் வரை காத்திருந்தார்கள்
பின் அதிரடியான சட்டதிருத்தங்களை செய்தார்கள், சில தொழில்நுட்ப விஷயங்களும் ரகசியமாக நிறுவபட்டன
NIA போன்ற சட்டங்கள் இறுக்கபட்டன, காஷ்மீரில் படைகள் குவிக்கபட்டன
முத்தாய்ப்பாக தாங்கள் நினைத்ததை அவர்கள் சொல்லமல் ஊடகங்களை நோக்கி கண்ணை காட்டினார்கள், அவை அரசு மனதில் இருந்ததை அப்படியே எழுதின
சில தினங்கள் நாடி பிடித்துபார்த்தார்கள் பெரும் சலசலப்பில்லை
இறுதியாக காஷ்மீரின் முக்கிய தலைவர்களை முடக்கிவைத்துவிட்டு அறிவித்துவிட்டார்கள்
ஒரு அரசன் மனதில் இருப்பதை யாரும் அறியா வண்ணம் செயலாற்றி வெற்றிபெற வேண்டும் என்பது ராஜதந்திரம், நிர்வாக பாடங்களில் ஒன்று
அதை மிக அழகாக செய்து காட்டியிருக்கின்றது இந்த அரசு
இதன் விளைவுகள் எப்படியும் ஆகட்டும், ஆனால் மிக தேர்ந்த தந்திரமான அந்த திட்டமிடலையும் எல்லா ஏற்பாட்டையும் செய்துவிட்டு சட்டென வெட்டும் அந்த ராஜதந்திரத்தையும் வாழ்த்தித்தான் தீரவேண்டும்