அய்யயோ நீர் எழுதிகொண்டே இரும்..

அய்யா உங்கள் கவிதைகளில் இலக்கணமில்லை

ஆமாம் , நான் தமிழ் இலக்கணம் முறைபடி படிக்கவில்லை

அது அல்ல சிக்கல், இலக்கணபடி உங்கள் கவிதைகளில் யாப்பிலக்கணமில்லை தளை தட்டுகின்றது, அணி இல்லை

உங்களுக்கெல்லாம் என்ன வெறுப்பு? ஒரு தாழ்த்தபட்ட சூத்திரன் தமிழில் எப்படி எழுதலாம், கவிதை எழுதலாம் எனும் வெறுப்புத்தானே? அதுதானே அப்படி எல்லாம் பேசவைகின்றது..சூத்திரன் எதை எழுதினாலும் உங்களுக்கு பொறுக்காதா?

அய்யய்யோ நீர் என்னவும் எழுதும், சரி இதெல்லாம் இலக்கியத்தில் என்ன வகை?

வசன கவிதை

அப்படி ஒன்று தமிழில் உண்டா? ஒன்று வசனம் இருக்கும் அல்லது கவிதை இருக்கும். இரண்டும் கலந்தால் எப்படி

தேனோடு பால் கலப்பதில்லையா? தேனோடு திணைமாவு ருசிப்பதில்லையா? இரண்டும் கலக்க கூடாது என் சட்டமா? சாதிகளே இணைய கூடாது என்பதுதானே உங்கள் கொள்கை அதில் ஆச்சரியம் என்ன?

அய்யயோ நீர் எழுதிகொண்டே இரும்..