உண்மையான இஸ்லாம்
எதற்கெடுத்தாலும் உபியில் காட்டுமிராண்டிதனம் , உபியில் பெரியார் பிறக்கவில்லை, அம்பேத்கர் பிறக்கவில்லை என்றெல்லாம் நாம் சொல்லிகொண்டிருந்தாலும் உலகமே கண்ணீர் விடும் காரியத்தை செய்திருக்கின்றனர் உபி இஸ்லாமியர்
ஆம் நேற்று பக்ரீத் தினம், வாரனாசியில் ஒரு இந்துபெண் வறுமைபட்ட பெண் நோயுற்று இறந்திருக்கின்றாள்
பக்ரீத் கொண்டாட்டம் எனினும் அதை மட்டுபடுத்துவிட்டு இஸ்லாமியர் அப்பெண்ணை சுமந்து சென்று இந்து மதப்படி தகணம் செய்திருக்கின்றனர்
ஈத் என்பது மகா முக்கியமான கடமை என்றோ, அந்நாளில் இன்னொரு சமய பிரேதத்தை அடக்கம் செய்வது முடியா விஷயம் என அவர்கள் கருதவில்லை
அதுவும் அதுமட்டுமல்லாமல் இந்து சமய சடங்குப்படி, சோனியை சுமந்து செல்லும்போது, ராம் நாம் சத்யா ஹை என்கிற ஸ்லோகத்தையும் உச்சரித்தபடி சுமந்துசென்றுள்ளனர்.
இஸ்லாமிய பெருமக்கள் இந்து சகோதரியினை அதுவும் இந்து ஸ்லோகங்களை சொன்னபடி சுமந்து சென்று இந்து முறைப்படி தகணம் செய்திருப்பது நாடெங்கும் ஏன் உலகெங்கும் கவனிக்கபடுகின்றது
தேசாபிமானிகள் அந்த இஸ்லாமிய சகோதரகளுக்கு பெரும் நன்றியும் வாழ்த்தும் தெரிவிக்கின்றனர்
உண்மையான இஸ்லாம் என்றால் இதுதான், இதுவே தான்
ஏ உபியின் இஸ்லாமிய உடன்பிறப்புக்களே உங்களால் தேசம் பெருமை கொள்கின்றது, காந்தி கண்ட இந்தியா இதுதான்
இந்த ஒற்றுமை வளரட்டும் செழிக்கட்டும்
உபி வானில் விடிவெள்ளி கிளம்பியிருப்பது வரவேற்கதக்க , மகிழதக்க விஷயம்
