பியூஸ் மனுஷ் தாக்கபட்டார்
அய்யகோ பியூஸ் மனுஷ் தாக்கபட்டார், மாபெரும் சமூக செயல்பாட்டாளர் தாக்கபட்டார், என்ன ஆட்சி இது? என்ன கருத்துரிமை படுகொலை இது என கிளம்பிவிட்டார்கள்
இந்த பியூஸ் மனுஷ் அப்படி சமூகத்துக்கு என்ன சிந்தித்து என்ன போராடினார் என்பதுதான் தெரியவில்லை
சரி அவருக்கு விவரங்கள் வேண்டுமென்றால் நிதி அமைச்சை அணுகலாம், நீதிமன்றத்தை அனுகலாம் , தொழில் துறையினை கண்காணிக்கும் அரச அமைப்புகளை அணுகலாம்
எதற்கு பாஜக அலுவலகம் சென்றார்? அங்கே அப்படி திறமையானவர்கள் யார் இருக்கின்றார்கள்?
ஆக வம்பு செய்ய திட்டமிட்டு சென்றிருக்கின்றார், அவர்களும் திட்டமிட்டு சாத்தியிருக்கின்றார்கள்
தமிழகத்துக்கு இது புதிதா?
ஏன் 1950களில் தன்னையே கொல்லமுயன்றதாக கலைஞர் அடிக்கடி சொல்வார்
ராமசந்திரன் சுடபட்டார்
இந்திரா தாக்கபட்டார், ராஜிவ் கொல்லபட்டார்
அத்வாணி மயிரிழையில் உயிர்தப்பினார்
இந்த ப,சிதம்பரமும் மூப்பனாரும் கூட தாக்கபட்டிருகின்றார்கள்
ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா மேல் அமிலமே வீசபட்டது
ஒன்றா இரண்டா தமிழ்நாட்டு பெருமைகள்?
இதில் பியூஸ் மனுஷை புதிதாக அடித்துவிட்டார்களாம்…