இன்றைய உலகின் தேவையும் அதுவேதான்
உலகமெல்லாம் சென்று பலரை மதம் மாற்றுவதுதான் உண்மை மதம் என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை
அது மதமாகவும் இருக்கம்முடியாது. இதை கொடுத்தால் அது கிடைக்கும் என்பது வியாபாரம் அன்றி வேறு என்ன?
இதுதான் பரலோக வழி,ரட்சிப்பின் வழி,உண்மையின் வழி என எதுவுமில்லை
நதிகளெல்லாம் கடலுக்கு தானே சென்று சேர்வது போல ஒவ்வொரு ஆத்மாவும் கடவுளிடம் திரும்பியே தீரும்
இதை செய்தால் இது கிடைக்கும் அது கிடைக்கும் என போதித்து வியாபாரம் செய்யும் மதங்களை விட, “கடமையினை செய்.. பலனை எதிர்பாராதே” என்பதில் எல்லா மானிட தத்துவமும் மத தத்துவமும் அடங்கிவிடுகின்றது
இன்றைய உலகின் தேவையும் அதுவேதான்