பெரிசுகள் இல்லாத வீட்டு குழந்தைகள்

அமைச்சர் சீனிவாசன் இந்தோனேஷியாவுக்கும், நிலோபர் கபில் ரஷியாவுக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரிசியஸ் நாட்டுக்கும், அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டுக்கும் அரசு முறை பயணமாக சென்று வந்துள்ளனர் என்பது தெரிந்த செய்தி

கேப்டன் பழனிச்சாமி அமெரிக்காவில் இருக்கின்றார்

அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகிய இருவரும் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றனர்.

இதில் சன்முகம் சொந்த விஷயமாக செல்கின்றாராம், அன்பழகன் எதற்கு செல்கின்றார் என தெரியவில்லை டைகர் பாம் அல்லது கோடாரி தைலம் வாங்க செல்லலாம்

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் எகிப்து நாட்டுக்கு சென்றுள்ளார். அது தனிபட்ட பயணமாம்

எகிப்தில் தமிழ்வளர்ப்பாரோ?

வளர்ப்பு அம்மா ஜெயலலிதா இல்லை, கார்டியன் சசிகலா சென்னையில் இல்லை

புதிதாக‌ தத்தெடுத்த‌ அப்பா மோடி நாட்டில் இல்லை

பெரிசுகள் இல்லாத வீட்டு குழந்தைகள் தெரு தெருவாய் ஆட செல்வது போல இவர்கள் அலைந்துகொண்டிருக்கின்றார்கள்

இதில் பன்னீர் செல்வம் மற்றும் செல்லூர் ராஜூ என இருவரும் எங்கும் சென்றதாக தெரியவில்லை

நிச்சயம் அவர்கள் மனம் வருந்தியிருக்கும்

அநேகமாக செல்லூர் ராஜு மனம் வெறுத்து கள்ள தோணியில் ஏறி பாண்டியராஜன் ஸ்டைலில் துபாய் செல்லலாம்

சேக் டிரெஸ் சகிதம் அவரும் ரெடியாக கிளம்பலாம்

கொச்சியில் அவரை இறக்கிவிட்டு இதுதான் துபாய் என்றால் அந்த அப்பாவி மனிதர் நம்பாமல் இருப்பாரா என்ன?