ரஜினி மேல் இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபமும் வெறுப்பும்
ரஜினி மேல் இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபமும் வெறுப்பும் என்றால் அதன் பெயர் கோபம் அல்ல மாறாக பயம்
அந்த ரஜினி ராமசந்திரனை முறைக்கும் பொழுது இவர்களுக்கு பிடித்தது, ஜெயாவினை எதிர்த்தபொழுது மிக பிடித்தது
1996ல் திமுக கூட்டணிக்கு அவர் ஆதரவு சொன்னபொழுது “வாவ் வாட் எ மேன்” என கொண்டாடியது இவர்களே
ரஜினி நம்மை போல திமுகவினை தாமதமாக புரிந்து கொண்டார், அதன் பின் இவர்களுக்கு அவர் பிடிக்காமலே போய்விட்டார்
ரஜினி ஒரு தேசியவாதி என்பதும் இந்துமததின்பால் பெரும் பற்று உள்ளவர் என்பதுமே இவர்கள் அவரை கரித்து கொட்ட ஒரே காரணம்
திமுக எனும் கட்சிக்கு அவர் கடுமையான சவாலாக உருவாகலாம் என அஞ்சுகின்றார்கள்
1996ல் ரஜினியால் ஆட்சிக்கு வந்த அவர்களுக்கு அந்த அச்சம் வருவதில் ஆச்சர்யமேதுமில்லை
இந்து கடவுள் மறுப்பு இந்திய தேசிய எதிர்ப்பு என்பதை தங்களின் கொள்கையாக வைத்திருக்கும் திமுகவுக்கு ரஜினிஎனும் தேசியவாதியும் இந்துமத அபிமானியும் எரிச்சலே
அது தீரா வயிற்றேரிச்சலே
தங்களின் ஏக போக அரசியலுக்கு ரஜினி பெரும் அச்சுறுத்தல் என அஞ்சி அலறுகின்றார்கள்
ரஜினி சாதியில் அடைபட மாட்டார், தமிழக இனம் மற்றும் இதர எல்லையில் அவரை அடைக்க முடியாது
பாமகவும் இன்னும் பலரும் அவரை குறிவைத்தது அதனால்தான்
மதம் இனம் கடந்த பெரும் அடையாளம் ரஜினி
ராமசந்திரன் , ஜெயாவுக்கு பின் காலம் அவருக்கே அந்த வாய்ப்பினை கொடுத்திருகின்றது
பைபிளில் ஒரு காட்சி உண்டு
இயேசு சும்மா நடந்து போனாலே பேய்கள் எல்லாம் “அய்யோ எங்களை தொலைக்கவா வந்தீர்” என அலறுமாம்
அப்படி இப்பொழுது ரஜினியினை நோக்கி அலறுவது யாரென கவனமாக பாருங்கள்
அது திக, திமுக மற்றும் பிரிவினைவாத
இம்சைகளாக மட்டுமே இருக்கும்