ரஷ்யா தன் எஸ் 400 சிஸ்டம் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு வழங்கபடும்
ரஷ்யா தன் எஸ் 400 சிஸ்டம் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு வழங்கபடும் என தெரிவித்த நிலையில் எஸ் 500ம் தயாராக இருப்பதாக அறிவிக்கின்றது
எஸ் 300 சிஸ்டம் சிரியாவில் இருக்கின்றது, எஸ் 400 துருக்கி மற்றும் சீனாவில் நிற்கின்றது, விரைவில் ஈரான் மற்றும் இந்தியாவுக்கு வரலாம்
இந்தியா நிச்சயம் ஈரான் அவர்கள் லட்சியம்
இப்பொழுது எஸ் 500 எனும் மேம்படுத்தபட்ட சிஸ்டத்தை தயார் செய்துவிட்டதாக சொல்லும் ரஷ்யா அதை சீனாவுக்கு கொடுக்கும் போல் தெரிகின்றது
இந்த எஸ் சீரிஸ் வான் பாதுகாப்பு சாதனத்தை ரஷ்யா எந்த யுத்தத்திலும் பயன்படுத்தவில்லை, டெமோ எனும் சோதனை பார்த்ததோடு சரி
இது தரை, வானம், கடல் உட்பட 6 வழிகளில் வரும் அதாவது வான்வெளி ஆபத்தான விமானம் , ஹெலிகாப்டர், தரை ஏவுகனை, கப்பல் ஏவுகனை,நீர்மூழ்க்கி ஏவுகனை , விமான ஏவுகனை என 6 வழி ஆபத்தை தடுக்குமாம்
அதாவது எஸ் சீரிஸ் வகைக்கு 6 முகங்கள் இருக்கின்றன, இதனால் அதை ஆறுமுகம் என அழைக்கலாம் அல்லவா?
முருகன் கையிலும் வேல் இருக்கின்றது, அவர் அதைத்தான் வீசி காப்பார்
இந்த சிஸ்டமும் ஏவுகனைகளை வீசித்தான் எதிரியினை அழிக்கும்
இதனால் எஸ் 400 சிஸ்டத்துக்கு ஆறுமுகம் பெயரை தாராளமாக சூட்டலாம்..
பாஜக அரசுக்கு இதை எல்லாம் சொல்லியா கொடுக்க வேண்டும்?
