பேசியே கெட்ட மாநிலம் தமிழகம்

பேசியே கெட்ட மாநிலம் தமிழகம்

பட்டுகோட்டை அழகிரியின் பேச்சு இன்று வைகோவின் பேச்சாக உருமாறி யாருக்கும் உதவமாலே போய்விட்டது

பசும்பொன் தேவரின் பேச்சின் சாயல் இல்ல மாறாக அவரின் “எக்குலமும் வாழட்டும் அதில் முக்குலத்தோர் வாழட்டும்.. என்ற சாயல் அங்கிள் சைமனின் “தமிழன் ஆளட்டும்” என உருமாறி வந்து காமெடியாகிவிட்டது

அண்ணாவின் பேச்சு கலைஞரில் தொடர்ந்தது, கலைஞர் அண்ணாவாக சிந்தித்தார், அண்ணாவாக மாறினார் அண்ணாவாக எழுதினார்

சும்மா சொல்ல கூடாது, அண்ணாவினை தன் பேச்சிலும் எழுத்திலும் அந்த பேசியே கழுத்தறுக்கும் தந்திரத்திலும் அப்படியே பின்பற்றினார் கருணாநிதி

எம்மை பொறுத்தவரை அண்ணா இறந்தது கடந்த வருடம் தான்

ஆக பட்டுகோட்டை அழகிரி, முத்துராமலிங்க தேவர், அன்ணாவின் வாரிசுகளாக இன்று நிற்பவர்கள் யார் தெரியுமா?

வைகோ, சீமான், முக ஸ்டாலின்

வெற்று கோஷமும் வீண் ஆர்பாட்டமும் வறட்டு சிந்தாந்தமும் இப்படியான தலைவர்களைத்தான் உருவாக்கும்