அந்த கோஷ்டியே ஒரு நாடக கம்பெனி

அவருக்கு இச்சமூகமும் ஏழை மக்களும் முக்கியம் என்றால் எனக்கு பின் என் சொத்துக்கள் தலித் மக்களை சேரும் என உயில் எழுதியிருக்கலாம்

அதை முறைபடுத்தி என் காலத்துக்கு பின்னால் எப்படி எல்லாம் பயன்படுத்தவேண்டும் என விதிகளை வகுத்து மறைந்திருக்கலாம்

மாறாக மணியம்மையினை திருமணம் செய்யும் அவசியம் என்ன?வயதான காலத்தில் கவனிக்க என்ற சமாளிப்பெல்லாம் தேவையில்லை எத்தனையோ தாதிகளை வைத்திருக்கலாம்

ஏன் மணியம்மையே காந்திக்கு மனுகாந்தி இருந்தது போல பேத்தியாக இருந்திருக்கலாம்

ஆனால் மணம் செய்யும் அவசியம் என்ன?

ஆக தனக்கொரு வாரிசு வேண்டும் என அவர் விரும்பியிருக்கின்றார், வாரிசு எதற்கு ஒரு பணக்காரன் ஆசைபடுவான் என்பது சொல்லிதெரியவேண்டியதில்லை

தன் திரண்ட சொத்து தன் வாரிசுக்கே வரவேண்டும் என விரும்பியிருக்கின்றார், மணம் செய்திருக்கின்றார் ஆனால் விதி வழிவிடவில்லை

பின் வேறுவழியின்றி அவை அறக்கட்டளைக்கு வந்தன‌

மணியம்மை வரும்முன்பு கிளம்பா கோஷ்டி, மணியம்மை மணைவியான பின் ஏன் கிளம்ப வேண்டும்?

பகுத்தறிவும் சாதி ஒழிப்பும் முக்கியமென்றால் மணியம்மை என்ன எந்த பெண்ணை அவர் கட்டியிருந்தாலும் அங்கேயே இருந்திருக்கலாம்

ஆனால் பெரியாரின் வாரிசு என ஒன்று வந்துவிட்டால் நாம் இலவுகாத்த கிளியாகிவிடுவோம் என அஞ்சி பறந்துவிட்டார்கள்

பகுத்தறிவு என்பது அதுதான்

பெரியார் தன் சொத்துக்களை காக்க மணம் செய்திருக்கின்றார், ஏழைகளுக்கு அல்லது இல்லாதவருக்கு அதை கொடுக்க அவருக்கு மனமே இல்லை

விதி வலியது என்பதாலும் சொத்துக்களை சுடுகாடு தாண்டி கொண்டு செல்லமுடியவிலை என்பதாலும் விட்டுவிட்டு போய்விட்டார் மானமிகு வீரமணி அதை கண்ணும் கருத்துமாய் பார்த்து கொண்டார்

இன்றும் பெரியாரின் நூல்கள் அரசுடமை ஆகாது என அடம்பிடிக்கும் காரியக்காரர் அவர்

அந்த கோஷ்டியே ஒரு நாடக கம்பெனி அதில் எல்லோரும் நடிகர்கள்