நீட் தேர்வில் ஒரு மாணவன் ஆள்மாறாட்டம்
இந்த நீட் தேர்வில் ஒரு மாணவன் ஆள்மாறாட்டம் செய்து சிக்கிவிட்டான், விஷயம் பற்றி எரிகின்றது.
கடும் கட்டுபாடுகள் நிரம்பிய நீட் தேர்வில் எங்கோ ஓட்டை இருந்திருகின்றது, அதில் இந்த வசூல் ராஜா மற்றும் 3 இடியட் பட பாணியில் தன் டூப்ளிக்கேட்டை எழுத வைத்து சீட் வாங்கிவிட்டான் ஒருவன்
பின் அதிகாரிகள் அதை கண்டுபிடித்து அவனை ஈரசாக்கு போட்டுபோட்டு தூக்கி சென்றுவிட்டார்கள்
அதிகாரிகள் துணையுடன் இது நடந்ததா? இல்லை இக்கோஷ்டி திட்டமிட்டு ஏமாற்றியதா என்ற விசாரணை நடக்கின்றது
பொதுவாக நீட் என்றாலே ஒருவருக்கு பெரும் கோபம் வந்துவிடும் அவர் பெயர் முக ஸ்டாலின்
நீட், மருத்துவ படிப்பு என்றாலே அவர் பழைய கேப்டன் படம் போல கண்கள் சிகப்பாகி, டி.ஆர் போல அழுது கொண்டே பிளாஷ் பேக்கில் மூழ்கிவிடுவார், ஆம் அந்த கொடுமைய்யும் வஞ்சகமும் துரோகமும் அவ்வளவு வலியானவை
ஆம் அந்த திருகுவளை முத்துவேலர் அந்நாளில் லத்தீனும் சமஸ்கிருதமும் தெரியாமல் மருத்துவராக முடியவில்லை,
அவருக்கொரு மகன் இருந்தார் அவர் பெயர் கருணாநிதி, முத்துவேலர் அவரை மருத்துவராக்க விரும்பினார்
“மருத்துவர் கருணாநிதி” ஆக விரும்பி லண்டன் மருத்துவகல்லூரிக்கு செல்ல முயன்ற கருணாநிதியினை பிராமண உலகம் கதற கதற அவர் கையில் இருந்த ஸ்டெதெஸ்கோப்பை பிடுங்கிவிட்டு இதோ பேனா போய் ஒழுங்காக தமிழ் எழுது என விரட்டிவிட்டது
இல்லையெனில் புற்றுநோய்க்கு மருந்து கண்டறியும் மருத்துவராக அவர் வந்திருப்பார்
மருத்துவ கருணாநிதி கலைஞர் கருணாநிதி என மாறியது ஒப்படித்தான்
இப்படி தந்தையும் மகனும் டாக்டராகும் கனவினை டெல்லியும் பிராமண சமூகமும் கெடுத்த நிலையில் மாறன் என்பவரும் விரும்பினார், அவரையும் பிராமண உலகம் முரசொலிக்கு எழுத அனுப்பிவிட்டது, மருத்துவ சிகாமணியாகவேண்டியர் முரசொலிமாறன் என்றானார்
இந்த சமூக குடும்ப கொடுமையினை கண்டு மனமெல்லாம் வெறுப்பும் வைராக்கியமும் கலந்து படித்தார் ஸ்டாலின், ஏதும் விடுபட கூடாது என்பதற்காக சில வகுப்புகளை பலமுறை படித்தார்
தன் தாத்தா, தந்தை மற்றும் மாமா போன்றவர்கள் அடையமுடியா மருத்துவபட்டத்தை அடைய கடுமையாக முயன்றார் ஸ்டாலின் ஆனால் அவரை 10ம் வகுப்போடு பள்ளிவிட்டு விரட்டிவிட்டார்கள் பிராமணர், இதில் பிராமணர் மற்று ஐரோப்பிய சதியும் இருந்தது
ஆம் ஸ்டாலின் டாக்டராகி தீரா நோய்க்கெல்லாம் மருந்தை கொடுத்துவிட்டால் எப்படி ஐரோப்பிய பிசினஸ் நடக்கும்? டாக்டர் சாந்தா எனும் பாப்பாத்தியின் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை எப்படி இயங்கும்?
இதனால் நடந்த கூட்டு சதியில் ஸ்டாலின் விரட்டபட்டார், அவருக்கான இடத்தில் தமிழிசை அக்கா படித்து பொறுப்பான டாக்டரானது வேறு விஷயம்
மருத்துவ கனவு நொறுங்கிய வெறுப்பில் ஸ்டாலின் சலூன் கடைக்குசென்று மொட்டை போட்டுவிட்டு அப்படியே திமுக இளைஞர் அணியினை தொடங்கினார்
தன் மகனை அவர் குலகனவுபடி டாக்டராக்க விரும்பினார் , அந்த உதயநிதிக்கு பாடிபில்டிங் சரியில்லை ஸ்டெதெஸ்கோப்பினை தூக்க பலமில்லை என விரட்டிவிட்டது பார்ப்பன உலகம், 4ம் தலைமுறை மருத்துவ கனவும் பார்ப்பன சதியால் நொறுக்கபட்டதை பார்த்து மனமுடைந்தார் ஸ்டாலின்
நோஞ்சான் போலிருக்கும் மகனை என்ன செய்வது என தெரியாமல் இருந்தவர் தனுஷ் என்பவனை பார்த்து மகனை நடிகனாக்கியது வேறு விஷயம்
இனி தன் பேரன் இன்பநிதி மருத்துவராகி தன் குடும்பத்து 4 தலைமுறை கனவினை நிறைவேற்றுவான் என அவர் மகிழ்ந்து, அவனுக்காக சன் ஷைன் எனும் பள்ளியே திறந்து அவனை படிக்க வைத்தார்.
அவன் படித்து முடித்து வெளிவந்ததும் அவனை மருத்துவராக்க திமுகவினரும் மருத்துவ கல்லூரி திறந்து வைத்து தயாராக இருந்தனர்.
ஆம் கலைஞர் கருணாநிதி எழுதி கொடுத்த சம்பாத்தியத்தில் ஸ்டாலினால் ஆங்கில இந்தி பள்ளி மட்டும்தான் கட்டமுடிந்தது, அந்த ஏழையின் நிலை அப்படி.
அதனால் மற்ற திமுக ஏழைகள் ஒன்று கூடி மருத்துவ கல்லூரி கட்டிகொண்டனர்
இன்பநிதி மருத்துவராகி முத்துவேலர் சமாதியில் ஸ்டெதஸ்வைத்து பழிமுடிப்பான் என எதிர்பார்த்த நிலையில்தான் நீட் தேர்வு அறிவிக்கபட்டு இன்பநிதியின் கனவு உடைந்தது
நொறுங்கி சரிந்தார் ஸ்டாலின்
அவரின் நினைவலைகள் சுழன்றன, ஒரு சூத்திர குடும்பம் 5 தலைமுறையாய் மருத்துவகனவினை பார்ப்பன மற்றும் டெல்லி சதியால் இழப்பதை அனுபமாக கண்டார்
மருத்துவ குடும்பம் கலைஞர் குடும்பமாய் மாறியதில் ஒரு தமிழன் டாக்டராக கூடாது அதுவும் சூத்திரன் ஆகவே கூடாது என சதி இருப்பதை கண்டார், பொங்கினார்
ஏகபட்ட மருத்துவர்களை உருவாக்க இப்பொழுது உழைக்கின்றார், நீட் தேர்வினை எதிர்த்து பெரும் போராட்டம் எல்லாம் நடத்த்தினார்.
இப்பொழுது இந்த ஆள்மாறாட்ட மோசடி அவர் பார்வைக்கும் வந்ததும் பொங்கிவிட்டார்.
ஆம் அவர் கலைஞர் புள்ள ஒரு விஷயமும் அவரிடம் இருந்து தப்பமுடியாது
ஆள்மாறாட்ட விஷயத்தினை பார்த்தவுடன் அவர் தாத்தா இப்படி ஏமாற்றபட்டது, அவர் தந்தை விரட்டபட்டது, 10ம் வகுப்பில் இவருக்கு பதிலாக இன்னொருவனை பள்ளி எழுதவைத்து இவரை பெயில் ஆக்கியது போன்ற நினைவலைகள் வந்தன
மகன் தன் சினிமாவில் டூப் கலைஞர்களை வைத்து நடிக்கும் காட்சிகளும் நிழலாடின, அது இயக்குநரின் சம்பதமின்றி நடக்காததை உணர்ந்தார்
ஆக இந்த ஆள்மாறாட்ட மோசடியில் மத்திய அரசு இருப்பதை கண்டறிந்தார், ஆம் மத்திய அரசு தேனிக்கு வந்து ஒருவனை எப்படி ஆள்மாற்றியது என்பது அவரின் ஞான கண்ணில் தெரிந்துவிட்டது
விடுவாரா? தப்பமுடியுமா? ஆம் அவர் கலைஞர் புள்ள அல்லவா?
இதோ ஆள்மாறட்ட மோசடியில் மத்திய அரசுக்கு தொடர்பு என கிளம்பிவிட்டார், இன்பநிதியின் மகன் காலத்துக்குள் நீட் தேர்வு நீக்கபட்டு முத்துவேலர் சந்ததியின் முதல் மருத்துவர் உருவாகிவிட வேண்டும் என்ற துடிப்புமட்டும் அவரின் வீர தீர போராட்டத்தில் தெரிகின்றது
ஆம் அந்த எளிய சூத்திர தமிழ் திராவிட குடும்பத்தின் டாக்டர் கனவினை பார்பானியமும் டெல்லி அரசியலும் அவ்வளவு முடக்கியிருகின்றன,
அந்த வலி அவர் மட்டுமே புரிந்து கொள்ள கூடிய வலி
