அசாமில் மட்டும் 19 லட்சம் வெளிநாட்டினர்
அசாமில் மட்டும் 19 லட்சம் வெளிநாட்டினர் உரிய ஆவணமின்றி தங்கியிருக்கின்றனர், அவர்களிடம் அகதி அந்தஸ்துமில்லை உரிய ஆவணமுமில்லை
அவர்கள் உரிய ஆவணங்களை பெற்றுகொள்ள உரிய கால அவகாசம் வழங்கபட்டும் அவர்களால் தங்கள் இந்திய வம்சாவழியினை நிரூபிக்கமுடியவில்லை
கிட்டதட்ட மெக்ஸிகோ மக்கள் அமெரிக்காவில் பிடிபட்டு திருப்பி அனுப்பபடுவது போன்ற சூழல் இது
அமித்ஷா மிக உறுதியாக ஆவணமில்லாதோர் வெளியேற்றபடுவர் என்கின்றார், அது போக நாடு முழுக்க இங்கு ஆவணமின்றி தங்குவோர் கணக்கெடுக்கபட்டு வெளியேற்றபடுவார்கள் என்கின்றார்
இது நாட்டுக்கு நல்லதா என்றால் நல்லது, நிச்சயம் எல்லா நாடும் இதைத்தான் செய்யும்
அகதிகளை கூட சில நாடுகள் ஏற்காது, அமெரிக்காவே மெக்ஸிகோ மற்றும் லத்தீன் அமெரிக்க மக்களை ஓட விரட்டுகின்றது
நிச்சயம் 19 லட்சம் பேர் இஸ்லாமியர் என்பதற்காக இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை அப்படி பார்த்தால் மெக்ஸிகோ மக்களும் கிறிஸ்தவர்கள், டிரம்ப்பும் கிறிஸ்தவர்
சிரியா இஸ்லாமிய நாடு அதன் அகதிகளை ஏற்க மறுத்த துருக்கியும் சவுதியும் இஸ்லாமிய நாடு
இது நாட்டு நலனுக்கான நடவடிக்கை, ஆனால் நிச்சயம் மதசாயம் பூசி திசைதிருப்புவார்கள், அமித்ஷா நிச்சயம் அதை காதில் வாங்காமல் நடவடிக்கை எடுப்பார் போல் தெரிகின்றது
எனினும் சட்டத்தில் கொஞ்சம் தர்மமும் மனிதாபிமானமும் கலந்து நடவடிக்கைகள் எடுக்கபட்டால் நல்லது