கீழடி நிலத்தின் எதிர்காலம் தெரியவில்லை
கீழடி நிலத்தின் எதிர்காலம் தெரியவில்லைஅரசு அதை கையபடுத்தி அழியாமல் காக்க வேண்டும், அரசிடம் பணம் இல்லையாம்சரி ஆளும் கட்சி எதிர்கட்சியினரிடம் இல்லா பணமா?ஜெகத்ரட்சகனின் முதலீடு 28 ஆயிரம் கோடியாம், ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா விலை மதிப்பே இல்லா சொத்துஒவ்வொரு கட்சிக்காரனும் வைத்திருக்கும் பணம் கொஞ்சமல்ல, ஆனால் ஒருவருக்கும் மனமில்லைஅரசியல் மாநாடு , வெற்று கோஷம், சாதி ஊர்வலம், வீணான ஆர்ப்பாட்டம் என ஒவ்வொன்றுக்கும் கோடிகணக்கில் செலவழிக்கும் மாநிலம் இதுஅதில் தமிழர் வாழ, தமிழர் கலாச்சாரம் வாழ என தவறாமல் சொல்வார்கள்., ஆனால் தமிழனின் அடையாளத்தை காக்க ஒருவரும் வருவாரில்லைதமிழர்கள் ஆளுக்கு ஒரு பங்கை கொடுத்து அந்த நிலத்தை மீட்டு வைத்தால் நலம், ஆனால் செய்வது யாரென்பதுதான் தெரியவில்லைநிச்சயம் அந்நிலம் அடையாளமாய் காக்கபட வேண்டும்அரசும் அமைதி எதிர்கட்சியும் அமைதி அதன் உதிரி கட்சிகளும் அமைதி, எல்லோரும் மகா அமைதி..எதற்கெல்லாமோ தானாக தலையிடும் நீதிமன்றம் இதில் தலையிட்டு அந்நிலத்தை மீட்டு கொடுக்கட்டும், அப்படி செய்தால் அந்த 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் ஆத்மாக்கள் அவர்களை ஆசீர்வதிக்கும்அவனவன் 300 ஆண்டுக்கு முற்பட்ட அடையாளம் இல்லை என ஏங்கி கொண்டிருக்கும் உலகில் 2600 ஆண்டுக்கு முற்பட்ட அடையாளம் கிடைத்தும் அதை காக்க பணமின்றி தவிக்கின்றார்களாம்இடைதேர்தலில் கட்சிகள் செலவழிக்கும் தொகை மட்டும் பல்லாயிரம் கோடிஒரு திரைபடத்தின் ஒரு நாள் வசூலும், ஏன் டாஸ்மாக்கின் ஒரு நாள் வசூலும்,பிரபல தொலைகாட்சிகளின் ஒருநாள் வசூலுமே போதும்ஆனால் செய்யமாட்டார்கள்இப்படிபட்ட விசித்திரமான மக்களையும் காட்சிகளையும் உலகில் எங்குமே பார்க்கமுடியாதுநெஞ்சு கனக்கும் நேரமிது..