இப்படித்தான் இருக்கின்றது தமிழக பத்திரிகைகளின் லட்சணம்
மோடிக்கும் ஜின்பெங்குக்கும் இடையில் நிற்பவர் அதிகாரி மதுசூதனன், பன்மொழி தெரிந்த அவர் அங்கு இருவருக்குமான மொழிபெயர்ப்பாளராக இருந்தார்
இந்த பத்திரிகையாளருக்கு மதுசூதனன் என்பவர் மொழிபெயர்த்தார் என்பது தெரிந்திருக்கின்றது, எந்த மதுசூதனன் என தெரியவில்லை உடனே அதிமுக மதுசூதனன் என்பவரின் படத்தை போட்டுவிட்டார்
அதையும் அப்பக்கத்திரிகையின் தலமை எடிட்டர் அனுமதித்திருக்கின்றார்
இப்படித்தான் இருக்கின்றது தமிழக பத்திரிகைகளின் லட்சணம்
(அதிமுக மதுசூதனன் குடும்பத்தாரும் உறவினரும் ஒருவேளை ரகசியமாக மாறுவேடத்தில் மதுசூதனன் அங்கு நின்றிருப்பாரோ? பாருங்கள் மனிதர் அண்ணா பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றதை கூட சொல்லவில்லையே என ஒருவித ஏகாந்த பரவச நிலையில் இருந்திருப்பார்கள்)
நல்ல வேளையாக பகவான் கிருஷ்ணனின் படத்தை மதுசூதனன் என்றவுடன் போடவில்லை அதுவரைக்கும் நல்லது
விரைவில் முதல்வர் பழனிச்சாமி என்றால் பழனிமலை கௌதாம்பினி முருகனை படமாக போட்டு செய்தி வெளியிட்டாலும் வெளியிடுவார்கள்.

