புரிந்து கொள்ளமுடியாதோருக்கு புதிர்
அவர்மேல் சில சர்ச்சை இருக்கலாம், பிடிக்காதவர்கள் எவ்வளவும் கரித்து கொட்டலாம்
ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை கடவுளை தேடி தேடி வணங்கும் ஒரே நடிகன் அவர்தான், தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதாகவும் அந்த சக்தியே தன்னை வழிநடத்தி இவ்வளவு உயர்த்தியதாகவும் நம்புகின்றார்
பொருள் வேண்டுபவர்கள் திருப்பதி மலைக்கு செல்வார்கள், அருள் வேண்டுபவர்கள் திருவண்ணாமலைக்கு செல்வார்கள்
தன்னில் தன்னை தேடி ஞானத்தை அடைய துடிக்கும் யோகியே இமயமலைக்கு செல்வான், அந்த யோகிகள் ரிஷிகள் வரிசையில் தன்னையும் அமர்த்திகொள்வான்
கொட்டி கிடக்கும் பணம், குவிந்து கிடக்கும் புகழ், கண்ணசைத்தால் பணத்தை தங்கமாக அடித்து அவர் காலடியில் குவிக்க காத்திருக்கும் தயாரிப்பு கம்பெனிகள், ஒரு வார்த்தை சொன்னால் தமிழகத்தை ஆட்டிவைக்கும் தொண்டர்கள்
அகில இந்தியா முழுவதும் செல்வாக்கு, இந்தியா தாண்டியும் சொல்வாக்கு
இத்தனையினையும் ஒதுக்கிவைத்துவிட்டு இமயமலைக்கு அமைதி தேடி செல்கின்றார் என்றால் அம்மனிதனின் மனம் சாதாரண மனமாய் இருக்கமுடியாது
அது ஞானத்தை மகா அமைதியினை அந்த பரம்பொருளின் ஜோதியினை கண்டறிய துடிக்கும் யோகியின் மனம்
இப்படி ஒரு மனிதன் இனி எக்காலமும் வரமாட்டான் , இந்த மனம் யாருக்கும் அமையாது
ஒரு ஆன்மீக மனநிலையில் அவரை நோக்கினால் கையெடுத்து வணங்கத்தான் தோன்றும்.
ரஜினி அவரை புரிந்தோருக்கு மாபெரும் அதிசயம்., புரிந்து கொள்ளமுடியாதோருக்கு புதிர்.
