எடியூரப்பா அழிச்சாட்டியம் செய்வதில் எமக்கு உடன்பாடில்லை

திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடமாட்டோம் என எடியூரப்பா அழிச்சாட்டியம் செய்வதில் எமக்கு உடன்பாடில்லைநிச்சயம் திப்பு சுல்தான் மைசூர் மன்னனின் பரம்பரை அல்ல, இடையில் அந்த அரசை ஹைதர் அலி கைபற்றுகின்றான், அவன் வாரிசாக திப்பு அமர்கின்றான்ஆனால் மிகபெரும் பொற்காலமாக அவன் காலம் திகழ்ந்திருக்கின்றது இன்றைய ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான செல்வம் அவன் ஆட்சியில் இருந்திருகின்றது, ஆட்டோமான் அரசுக்கு பின் உலகில் நோக்கபடும் இஸ்லாமிய அரசனாக அவன் இருந்திருக்கின்றான்நெப்போலியன் தேடிய மாவீரனும் திப்புவேதிப்புவின் வாள்முதல் அவன் படையில் பயன்படுத்திய ராக்கெட் வரை அதிசயமே, அந்த ராக்கெட் வடிவம் இன்றும் அமெரிக்காவில் உண்டு. பின்னாளைய வான் பிரவுணுக்கு அவனே முன்னோடிதிப்பு மதவெறியன் எனபதில் எமக்கு உடன்பாடில்லை. அவன் மற்ற மன்னர்களை சேர்த்துகொண்டு வெள்ளையனை எதிர்க்க எண்ணி மற்ற சமஸ்தான மன்னர்களை அணுகியபொழுதுதான் சிக்கல் வெடித்ததுகேரள மன்னர்களும் இன்னும் பலரும் வெள்ளையனுடன் சேர்ந்து திப்புவினை எதிர்த்ததே சிக்கலுக்கு காரணம்திப்பு இந்து எதிரி அல்ல மாறாக வெள்ளையனுக்கு அஞ்சி அவனோடு வரமறுத்த இந்து மன்னர்களுக்கே எதிரிஅவன் திருச்சி பக்கம் செய்தது அடாவடி அல்ல, இங்கு மதுரை மன்னர்களுக்கும் அவனுக்கும் நல் உறவு இருந்தது, இந்த மருதுபாண்டியர் வேலுநாச்சியார் எல்லாம் அவனோடு நட்புறவில் இருந்தனர் அவன் இந்து எதிரியாக இருந்தால் மருது பாண்டியர் அவன் பக்கம் சென்றிருக்கமாட்டார்கள்காவேரியில் அன்றொரு கொடுமை இருந்தது, இதோ இவ்வருடம் மூன்றுமுறை பொங்கிய மேட்டூர் அணை போல அக்கால காவேரி பொங்கி தஞ்சையினை அழித்தால் மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும், உன் காவேரி உன் பழி என சொல்லி பெரும் தொகை வசூலிப்பார்கள் தஞ்சை வாசிகள்திப்பு இதை கண்டித்தே காவேரி கரைகளை திருச்சிபக்கம் உடைத்தான், அந்த தகறாறே அது மத தகறாறு அல்ல‌இச்சர்ச்சை நெடுநாள் நீடித்து பின்பு விஸ்வேஸ்ரய்யா வந்து அங்கு அணைகள கட்டி சொட்டுநீர் இங்கு வராமல் இருக்க வழிசெய்தார், இன்று தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றோம்வரலாற்றில் திப்பு இந்துமத அபிமானியாக இருந்தான், மைசூர் சமஸ்தானத்தின் குலதெய்வமான அந்த சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு அள்ளிகொடுத்தான்திருவாடுதுறை ஆதீனம் உட்பட பல ஆதீனங்களுக்கு வந்து நன்கொடை எல்லாம் கொடுத்திருந்தான்அவன் இஸ்லாமியனாயினும் மக்களின் நம்பிக்கைபடி இந்த ஜாதகம் ஜோசியம் பூஜை என்பனவற்றில் அபார நம்பிக்கை இருந்தது, பிராமணர்களை அவன் உயர் இடத்தில் வைத்திருந்தான்மற்றபடி திப்புவின் அயல்நாட்டு போர்களை ராஜராஜ சோழனோடு ஒப்பிட்டு சொல்லாம், ராஜராஜ சோழன் கேரளாவின் அதாவது அன்றைய சேரநாட்டின் பல நகரங்களை கொழுத்தினான், அந்த காந்தளூர்சாலை எல்லாம் அந்த ரகம்அப்பொழுது இந்து ஆலயங்களும் பாதிக்கபட்டன, அதற்காக ராஜராஜ சோழனை இந்து விரோதி என சொல்லமுடியுமா? பா.ரஞ்சித்தே சொல்லமாட்டான்ஆக திப்பு செய்ததெல்லாம் அந்நாளைய போர் வழக்கங்களின்றி இந்து எதிர்ப்பு ஆகாதுஒரு விஷயம் மனதில் வையுங்கள், ஹைதரும் திப்புவும் பூரண இஸ்லாமியராகி இந்து வெறியர்களாக இருந்தால் மைசூர் சமஸ்தானம் என்றோ தூக்கி எறிந்திருக்கும் அவர்கள் இப்படி ஆண்டிருக்க முடியாதுமக்கள் ஒரு இஸ்லாமியனை அரசனாக ஏற்றுகொள்ளும் அளவு அவன் இருந்திருக்கின்றான்திப்புவினை இந்து முஸ்லீம் பிரச்சினையினை கிளறியே வெள்ளையன் வென்றான், அவன் உருவாக்கிய கட்டுகதைகள் எல்லாம் அவ்வகைஇன்றும் சதாம் உசேன், கடாபி , புட்டீன் என தனக்கு பிடிக்காதவர்களை ஒருமாதிரி கெட்ட பெயர் உருவாக்குவது வெள்ளையன் ஸ்டைல், அதுதான் திப்புவுக்கும் நடந்ததுநாம் திப்புவினை இந்திய அரசர்களில் ஒருவனாக வெள்ளையன் அரண்ட மாவீரனாக நெப்போலியனின் மனம் கவர் வீரனாக பார்க்கின்றோம்அவனுக்கு இத்தேசம் மரியாதை கொடுத்தே தீரவேண்டும், அவன் இம்மண்ணின் அடையாளம்எடியூரப்பா இதற்கு இடையூரப்பாவாக இருந்தால் அது மாபெரும் பழியாகும், காலம் அதை துடைத்து திப்புவின் பெருமையினை பறைசாற்றும்வீர சிவாஜியும் திப்புவும் வெள்ளையனை அலறவிட்டவர்கள், அதில் சிவாஜிக்கு சிலை விழா என்பதும் திப்புவினை ஒதுக்குவதும் அப்பட்டமான மதவாத அரசியல்இதை வன்மையாக கண்டிக்கின்றோம், எடியூரப்பா செய்வது மாபெரும் தேசவிரோதம்வெள்ளையன் காலத்து கட்டு கதைகளை நம்பி திப்புவினை எடியூரப்பா ஒதுக்குவாரானால் அவருக்கு தேசகொடியினை ஏற்றவோ இந்திய ஒற்றுமை பற்றி பேசவோ தகுதியே இல்லைநாம் திப்பு பிறந்தநாளை ஒரு இந்தியனாக கொண்டாடியே தீருவோம், அதை எந்த எடியூரப்பா தடுப்பார் என பார்த்துவிடலாம்..