இந்திய ஜெர்மன் உறவில் இது புது அத்தியாயம்
உலகில் மகா சக்திவாய்ந்த நாடு ஜெர்மன், பெரும் ராணுவபலம் இல்லை எனினும் மிக வலுவான பொருளாதார சக்தி அது. என்ன இருந்தாலும் ஹிட்லரின் பூமி அல்லவா? அதனால் அந்நாடு வலுவான ராணுவம் அமைத்துவிட கூடாது என்பதில் பல நாடுகளுக்கு கடும் ஆசை
ஜெர்மனும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அதன் போக்கில் வளர்ந்து நிற்கின்றது, இன்று ஐரோப்பாவினை ஆட்டிவைக்கும் தேசம் அதுதான். பிரிட்டன் எல்லாம் பிடி இழந்தாயிற்று
எலக்ட்ரானிக்ஸ் நுட்பத்தில் யாரும் இருக்கலாம் ஆனால் மிக கடுமையான விஷயமான கனரக தொழிலில் ஜெர்மன் அன்றும் இன்றும் என்றும் நம்பர் 1. அந்த வித்தையில் அவர்களை அடிக்க ஆளே இல்லை
புதுபுது மெஷின்கள் முதல் எந்திரம் வரை அசால்ட்டாக தயாரித்து தள்ளுவார்கள். எந்திரவியலில் அவர்கள் தொழில்நுட்பமே உலகில் நம்பர் 1 தொழில்நுட்பம்
அப்படிபட்ட ஜெர்மனின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உலகின் சக்திவாய்ந்த பெண்மணி. அந்நாட்டு மக்களும் வேறு தேர்வே இல்லாமல் அவரை கொண்டாடுகின்றனர்
14 ஆண்டுகளாக ஜெர்மன் அதிபராக கோலோச்சும் அந்நாட்டு இந்திராகாந்தி அவர்
அந்த பெரும் தேசத்தின் அதிபரான மார்கெல் இந்தியா வந்திருக்கின்றார், 3 நாட்கள் இங்கு தங்கி பல ஒப்பந்தைகளில் கைசாத்திடுவார்
இந்தியாவும் ஜெர்மனும் பல விஷயங்களை கூட்டாக செய்ய போகின்றது
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பெரும் முயற்சிக்கு பின் இது நடந்திருக்கின்றது, இந்திய ஜெர்மன் உறவில் இது புது அத்தியாயம் என்பதால் உலக நாடுகள் கூர்மையாக

கவனித்துகொண்டிருக்கின்றன