சகலமும் அறிந்த ஞானபண்டிதன் நீ..
ஓளவையே நாம் ஏன் உம்மிடம் வந்து சுட்ட பழம் கேட்டு விளையாடினோம் தெரியுமா?
புரிகின்றது திருகுமரா
நான் மட்டும் உன் வரலாற்றில் இல்லையென்றால் இன்று உன்னை கருப்பு சேலை கட்டி கண்றாவி கோலத்தில் நிறுத்தியிருப்பார்கள், நாமே உன்னை காத்தோம்..
ஞானசம்பந்தனை என் தாய் காத்தாள், அபிராமி பட்டரையும் அப்படியே காத்தாள். மாணிக்கவாசகனை எம் அப்பன் காத்தான்
கம்பனை சரஸ்வதி காத்துகொண்டாள், இளங்கோவடிகளை மணிபல்லவ பூதமும் காவுந்தியடிகளும் ஆரியங்காவு இசக்கியும் காத்தார்கள் ஆனால் பாவம் வள்ளுவன் வசமாக சிக்கி கொண்டான்,
ஆமாம் முருகா, குன்றுதோறும் அமர்ந்து அது கல்குவாரி ஆகாமல் பார்த்துகொண்டவன் அல்லவா நீ? இல்லையென்றால் தமிழ்நாட்டில் ஒரு குன்று இருந்திருக்கும்? சகலமும் அறிந்த ஞானபண்டிதன் நீ..”
