அமைச்சர் மா.பா பாண்டியராஜனுக்கும் தங்கம் தென்னரசுக்குமான மோதல் தொடங்கியிருக்கின்றது
சரி வள்ளுவரை அப்படியே விடாயிற்று இனி அவர் 1331ம் குறள் சொன்னாலும் கண்டுகொள்வார் யாருமில்லை
இப்பொழுது அமைச்சர் மா.பா பாண்டியராஜனுக்கும் தங்கம் தென்னரசுக்குமான மோதல் தொடங்கியிருக்கின்றது, இருவரும் முதல் பந்தை வீசிவிட்டு ஆழம் பார்க்கின்றார்கள்
இது கட்சி மோதலாக வெடிக்குமா இல்லை ஜாதி மோதலாக வெடிக்குமா என்பது தெரியவில்லை
இருபக்கமும் வரிந்து கட்டுவதால் நாமும் இம்சை அரசன் வடிவேலு போல “ம்ம்ம் ஆரம்பியுங்கள்” என சொல்லிவிட்டு அமர்ந்து விட்டோம், ஆட்டம் களை கட்டுவது போல் தெரிகின்றது
இப்பக்கம் மாவீரர் ஜெயக்குமார், அதிரடி வீரர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டென அடிக்கும் செல்லூர் ராஜூ என்ற பலம் வாய்ந்த அணி உள்ளது
அப்பக்கம் ஸ்டாலினின் வலது இடது அல்லக்கை கரமான துரைமுருகன் மெடிக்கல் விடுப்பில் சென்றிருப்பது பலவீனம் இருந்தாலும் தென்னரசு, ஆர்.எஸ் பாரதி போன்ற திராவிட வீரர்கள் களத்தில் உண்டு
இவர்கள் களத்திலும் இவர்களுக்கான கோச் ஸ்டாலின் உதயநிதி மற்றும் எடப்பாடி எல்லாம் மைதானத்தின் வெளியே அமர்ந்து தாக்குதல் உத்தியினை சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
எப்படியும் நடுவர் நம்பக்கம் என்பதால் எடப்பாடி தரப்பு கொஞ்சம் கூடுதல் உற்சாகத்துடன் இருக்கின்றது