அப்படி என்ன தகவல் எடுத்திருப்பார்கள்?

வடகொரியா ஹேக்கிங் கும்பல் கூடங்குளம் அணு உலையில் ஊடுருவியதாக சில செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன

வடகோடியார்களிடம் அரைகுறை ராக்கெட் நுட்பம் உண்டால் தவிர ஹேக்கிங் எல்லாம் இல்லை என்கின்றது உலக தகலவ்கள்.

இன்னொரு சக்தி அவர்கள் பெயரை சொல்லி இம்மாதிரி காரியங்களை செய்து வடகொரியாவினை தனிமை படுத்த திட்டமிடுகின்றார்கள் என்பது உலக தியரி

வடகொரியாவுக்கு இந்தியாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை சிக்கலும் இல்லை பின் ஏன் அவர்கள் இங்கு ஊடுருவ வேண்டும்?

எதோ ஒரு சக்தி அடியிருக்கின்றது, நாம் முன்பே சொன்னபடி அணுவுலையின் மகா முக்கிய பகுதிக்குள் ஊடுருவ முடியாது மாறாக அணுவுலையின் தகவல்களை எடுக்கலாம்

அப்படி என்ன தகவல் எடுத்திருப்பார்கள்?

கூடங்குளம் அணுவுலை ஓழுங்காக வேலை செய்து 2 வருடம் ஆகிட்டது என்பதை தவிர என்ன செய்தி இருக்க முடியும்?

ஆனால் அணுசக்தி கழகத்துக்கு ஆபத்தான செய்தி அதுவாகத்தான் இருக்க முடியும்.