இன்றோடு அதற்கு முற்றுபுள்ளி வைத்தாயிற்று
இந்த விவகாரத்த்தில் ஆர்.எஸ்.எஸ் , பாஜக காரணம் என சொல்வதெல்லாம் முழு நியாயமில்லை
பாபர் மசூதி கட்டும் பொழுது ஆர்.எஸ்.எஸ் இல்லை, பாஜக இல்லை
பாபரையும் முழுக்க குறை சொல்லமுடியாது, அந்த பூமி மரியாதைகுரிய பூஜித்தலுக்குரிய இடமாய் அன்றே இருந்தது. பாபர் கடைசியாக வந்த ஆப்கானியர் அவருக்கு முன்பு வந்தவர் எல்லாம் கொள்ளை அடித்து ஓடும் கூட்டமாய் இருந்தனர்
பாபர் இந்தியரில் ஒருவராக ஆள எண்ணினார், இந்தியர் வணங்கும் இடத்தில் தானும் வணங்கி அவர்களின் அன்பை பெற விரும்பினார், அப்படி வந்ததுதான் மசூதி
தொடக்கதில் மசூதிக்குள் இஸ்லாமியரும் வெளியே இந்துக்களின் ராமர் கோவிலுமாக நிலமை அமைதியாய் இருந்திருக்கின்றது
வெள்ளையன் திப்பு சுல்தானை வீழ்த்தும் பொழுதும், அந்த சிப்பாய் புரட்சி அடக்கும் பொழுதும் இந்து இஸ்லாம் மோதல் தனக்கு நல்லதென கண்டான்,
அன்றிலிருந்து வெடித்ததுதான் சிக்கல்
அது அவ்வப்போது எழுந்து வந்த குரல், உறங்கி வந்த கணல்
நிச்சயம் ஆர்.எஸ்.எஸ் அந்த சிக்கலின் மூலம் அல்ல, பாஜகவும் அல்ல
ஆண்டாண்டு காலம் கேட்ட குரலைத்தான் அவர்களும் சொன்னார்கள், ஆனால் அந்த அத்துமீறிய வன்முறை இடிப்பெல்லாம் ஏற்றுகொள்ளமுடியாது
நாம் சொல்வது இதுதான் இதெல்லாம் வெள்ளையன் விதைத்த விதை அது தேசபிரிவினை நடந்த பின்னும் இங்கு தொடர்ந்தது, அழித்தது
இன்றோடு அதற்கு முற்றுபுள்ளி வைத்தாயிற்று