புரிய முயற்சித்தால் தலைதான் சுற்றும்

மனித கழிவினை மனிதனே அகற்றுவதா இது சமூக கொடுமை அல்லவா? இதை கண்டித்த இயக்கம் இது, சமூக நீதி இயக்கம் இது என சொல்வதும் திமுகவினரே

அந்த நித்யா என்பவர் கலைஞருக்கு எல்லாமுமாய் இருந்தான், கருணாநிதிக்கு எல்லாம் அவனே அனுதினமும் எடுத்து போட்டதுவரை அவனே என கண்ணை கசக்கியும் கொள்கின்றனர்

மனிதனை மனிதன் இழுப்பது சுயமரியாதை இல்லை அதனால் கைரிக்சாவினை திமுக ஒழித்தது கலைஞர் ஒழித்தார் என்கின்றார்கள்

சங்காராச்சாரியார் பல்லாக்கு பவனி கூட மனிதனை மனிதன் சுமப்பதா என திமுக கேட்டதால் நின்றுவிட்டதாம்

அதே நேரம் தன் சக்கர நாற்காலியினை தள்ளிய அந்த ட்ரோலி பாய்ஸ்க்கு கலைஞர் வீடெல்லாம் கொடுத்தார் என்கின்றார்கள்

அவனுக கொள்கையே புரியவில்லை, புரிய முயற்சித்தால் தலைதான் சுற்றும்