பொய் சொல்ல மட்டும் உருவாக்கபட்ட இயக்கம்
திருசெந்தூர் கோவிலுக்கு எல்லோரும் நுழையும் உரிமையினை வாங்கி கொடுத்ததது திராவிட கழகம் என்றொரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது
தமிழகத்தில் மிக சில ஆலயங்களிலே இக்கொடுமை இருந்தது, திருசெந்தூர் கோவில் அந்த வரிசையில் இல்லை
மதுரையில் வைத்தியநாத அய்யரும் பசும்பொன் தேவரும் அக்கொடிய நடைமுறையினை போராடி நீக்கியிருகின்றார்கள், மதுரைக்கு நாத்திகம் பேசசென்ற பெரியார் அடித்து விரட்டபட்டிருக்கின்றார்
திருசெந்தூர் ஆலயம் எல்லா மக்களும் நுழையும் வகையில்தான் இருந்தது, அது பெரும்பாலும் நாடார்கள் கையில்தான் இருந்தது, இன்றும் அப்படியே
அய்யா வைகுண்டர் காலத்தில் அவரே அங்குதான் ஞானம் பெற்றார் என்கின்றது வரலாறு
வேறு எங்கு இந்த கறுப்புசட்டைகள் உரிமை வாங்கி கொடுத்தன?
ஈரோட்டுபக்கம் ஏதும் திருசெந்தூர் இருக்குமோ என்னமோ? விசாரித்து பார்த்தால் தெரியும்
பொய் சொல்ல மட்டும் உருவாக்கபட்ட இயக்கம் திராவிட கழகம் என்பதை தவிர சொல்ல ஒன்றுமிலை