தேவையும் அத்திவாசியமுமே ஒரு சமூகத்தை போராட வைக்கும்
தேவையும் அத்திவாசியமுமே ஒரு சமூகத்தை போராட வைக்கும், மற்றபடி ஒரு பயலும் போராட வரபோவதில்லை
தாங்கமுடியா கெடுபிடிகளிலும் , இனி இழக்க ஒன்றுமில்லை எனும் நிலையிலும் ஒரு சமூகம் பொங்கி எழும்
ஈரானிய சமூகம் அப்படி பொங்கி பெரும் போராட்டம் நிகழ்கின்றது, கடும் இறுக்கமான ஈரானிய அரசின் துப்பாக்கி சூட்டில் 36 பேர் இறந்தாயிற்று
இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்தமாதம் ஈராக்கிய மக்களின் கிளர்ச்சியினை எப்படி ஒடுக்குவது என ஈரான் பாடம் நடத்திவிட்டு வந்தபின் சொந்த மண்ணிலே அதை எதிர்கொள்வது
40 ஆண்டுகால புரட்சி ஈரானை முதன் முறையாக ஆட்டிபார்க்கின்றது மக்கள் போராட்டம், ஆக நேரடி போர் இல்லாமல் செய்யவேண்டியதை செய்து ஈரானிய மக்களே அந்நாட்டு அரசோடு போராட வைத்துவிட்டது அமெரிக்கா
உலகை கவனிக்கின்றோம், மக்கள் போராட்டம் பெரிதாக நடக்கும் நாடுகளில் பெரும்பான்மை நாடுகள் பெட்ரோல் வளமிக்க நாடுகள்
வளமிக்க நாடுகளின் மக்கள் வறுமையால் போராட வருகின்றார்கள் என்றால் அதன் காரணம் வல்லரசுகளின் அரசியல் ஆட்டமன்றி வேறேன்ன?