இலங்கையின் பிரதமராகின்றார் மகிந்த‌ ராஜபக்சே

இலங்கையின் பிரதமராகின்றார் மகிந்த‌ ராஜபக்சேஆக இலங்கையில் பிரபாகரன் செய்த ஒரே சாதனை, ராஜபக்சே குடும்பத்தை உலகின் சக்திவாய்ந்த குடும்பமாக மாற்றியது ஒன்றுதான்தம்பியும் அண்ணனும் உயர்பதவிகளில் இருப்பது சீனாவுக்கு சாதகம், இந்தியாவுக்கு அல்ல எனினும் இந்தியா தன் பிடியினை விடாதுஎப்படியோ மகிந்த ராஜபக்சே மறுபடி இலங்கையில் வந்துவிட்டார். அவரை வைத்து எப்படி இங்கு அரசியல் செய்யலாம் என ஈழ அழிச்சாட்டிய கோஷ்டிகள் ஆழ்ந்த யோசனையில் உள்ளன‌இதுவே காங்கிரஸ் மற்றும் திமுக அரசு இருந்தால் இவர்கள் இந்நேரம் துள்ளி குதித்து வந்து “போர்குற்றவாளிகள் இலங்கையினை ஆள இந்தியா வழிசெய்துவிட்டது இது தமிழின துரோகம்” என குதியோ குதி என குதிப்பார்கள்அமித்ஷா காலம் என்பதால் சத்தமில்லைஎனினும் மைத்ரிபால காலத்தில் மல்லாக்க கிடந்த ஈழகோஷ்டி எல்லாம் அய்ய்ய் ராஜபக்சே என மறுபடியும் உற்சாகமாகின்றன‌தமிழக அரசியல்வாதிகளுக்கு அரசியல் வாழ்வினை சிங்களனே கொடுக்கமுடியும் என்பது விசித்திரம் இல்லையா?