பிரபாகரன் எங்கே நாட்டை உருவாக்கினான் என்பதுதான் தெரியவில்லை
பிரபாகரன் எங்கே நாட்டை உருவாக்கினான் என்பதுதான் தெரியவில்லை, அது ராவணன் காலத்தில் இருந்தே உருவாக்கபட்ட நாடாகத்தான் இருந்தது
பிரிட்டன் காலம் வரை ஒரு பக்கம் தமிழரும் ஒரு பக்கம் சிங்களுருமாகத்தான் இருந்தனர், இதில் பிரபாகரன் என்றைக்கு அங்கீகரிக்கபட்ட ஈழ நாட்டின் தலைவனாக இருந்தான் என்றால் சொல்ல தெரியவில்லை
நானே அதிபர் என பைத்தியம் கூட சொல்லிகொள்ளும் , ஆனால் அங்கீகாரம் யார் கொடுத்தார்கள்?
அவராக ஒரு சில அடிப்பொடிகளுடன் இது என் நாடு என சில ஊர்களில் துப்பாக்கி முனையில் மாமுல் வசூலித்தால் அவர் நாடு அடைந்ததாக அர்த்தமா?
அப்படினானால் காஷ்மீரில் கூட முன்பு நாடு அடைந்திருந்தார்கள்..
எங்கே பிரபாகரனின் நாடு என கேட்டால், அவரோடு கொண்டு சென்றுவிட்டார் என சிரிக்காமல் சொல்வார்கள்