அந்த கோணத்திலும் ஈழ விவகாரத்தை பார்க்கலாம்
ஆம், அந்த கோணத்திலும் ஈழ விவகாரத்தை பார்க்கலாம்
இங்கு இந்துக்களுக்கு கறுப்பு சட்டைகள் பெரியாரிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள் மூலம் சவால்விட்ட மிஷனரிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு இலங்கை அதுவும் வட இலங்கை எனும் சைவ பூமியில் என்ன செய்வது என தெரியவில்லை
முதலில் கல்லூரி எல்லாம் கட்டினாலும் அந்த சைவ பூமி சிலிர்தெழுந்து இந்து கல்லூரி எல்லாம் அமைத்து சவால்விட்டார்கள், ஆறுமுக நாவலர் மண் என அது சவால்விட்டது
எத்தனையோ அறிஞர்களும் பெருமக்களும் தமிழரிஞர்களும் ஆன்மீக செம்மல்களும் வந்தார்கள்
மிஷனரிகளுக்கும் மதமாற்ற கும்பலுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, வாய்ப்பு புலிகல் விஷயத்தில் வந்தது
புலிகளின் வரலாற்றில் ஆண்டன் பாலசிங்கமே திருப்பம், அவர்தான் திருப்பத்தை கொடுத்தார்
பாலசிங்கமும் அவரின் கிறிஸ்தவமனைவியும் உள்ளே வந்தபின்பே காட்சிகள் மாறி புலிகள் அசுரபலம் பெற்றார்கள், புதுபுது ஆயுதமும் பலமும் அவர்களுக்கு கிடைத்தன
பால்சிங்கம் அவ்வளவு பலம் பெற்றுகொடுத்தார்
புலிகள் காலத்தில் மிஷனரிகள் ஆட்டம் கனிசமாக இருந்தது, பிரபாகரன் முருக பக்தனாக இருந்தாலும் அவனுக்கு அறிவு கொஞ்சம் கம்மி, பாலசிங்கம் அதை அட்டகாசமாக பயன்படுத்தினார்
மிஷனரிகளுக்கு தொண்டு நிறுவணம் என அவர்களுக்கும் புலிகள் வழிவிட்டனர்
யாழ்பாண கந்தசாமி கோவிலை அகதிகள் முகாமாக மாற்றி , சிங்களரின் காலை அங்கு கிட்டு வைத்த சம்பவமெல்லாம் நடந்தது
ஈழத்தில் சிக்கல் வரவர ஈழத்தவர் ஐரோப்பா கனடா அமெரிக்கா ஓடுவதும் அங்கிருந்து மிஷனரிகளுக்கு ஆதரவான சம்பவங்களும் வரதொடங்கின
போரினால் பாதிக்கபட்ட ஈழமக்கள் என மதமாற்றலை கடும் ஜரூராக செய்தனர் மேல்நாட்டு கும்பல், புலிகளும் அதை கண்டும் காணாமலும் இருந்தனர்
இஸ்லாமியருக்கு எதிராக சிங்களனுக்கு எதிராக பொங்கிய புலிகள் ஒரு இடத்திலும் கிறிஸ்தவனை எதிர்க்கவில்லை
சிங்கள புத்த இனவாதம் என்ற புலிகள், இஸ்லாமிய துரோகம் என சொன்ன புலிகள் ஒரு இடத்திலும் ஐரோப்பிய கிறிஸ்தவ தந்திரத்தை தொட்டும் பார்க்கவில்லை
சிங்கள இனவாதி ஜெயவர்த்தனே கிறிஸ்தவன் என்பதற்காக தப்பிவிக்கபட்டான்
ரணிலை வீழ்த்தி ராஜபக்சேவினை புலிகள் வெல்ல வைக்க அவன் ஒரு கிறிஸ்தவன் என்பதும் காரணமாயிருந்தது
இலங்கையினை சுடுகாடு ஆக்கியதில் மேல்நாட்டு கிறிஸ்தவ கும்பலுக்கும் பங்கு இருந்தது, ஆண்டன் பால சிங்கம் முதல் ஜெகத் கஸ்பர் வரை புலிகளுக்குள் வந்தனர்
மேற்கத்திய கிறிஸ்தவ அடிவருடிகளான திராவிட கோஷ்டிக்கும் புலிக்குமான தொடர்பு உலகறிந்தது
நளினிமகள் டாக்டரானதும் பேரரிவாளன் வீட்டு திருமணங்களே அதற்கு சாட்சி
போர் முடிந்த பூமியில் என்ன நடக்கின்றது?
இப்பொழுதும் போரினால் பாதிக்கபட்ட மக்களுக்கு தொண்டு செய்கின்றோம் என அல்லேலூயா கோஷ்டிகள் அங்கு குவிந்து கிடக்கின்றன
தமிழ்நாட்டு போதகர்களின் சொர்க்கபுரியாக் வன்னியும் கிளிநொச்சியும் விளங்க்குகின்றன, ஆம் தமிழ் தெரிந்த போதகர்களாம்
உலகெல்லாம் இருந்து கிறிஸ்தவ கோஷ்டிகள் அங்கு படையெடுக்கின்றன
அந்த அழிவுக்கு காரணமும் அவர்களே, அய்ய்யோ அழிந்துவிட்டீர்கள இதோ கிறிஸ்தவம் என ஓடிவருபவர்களும் அவர்களே
இப்பொழுது நிலமையினை கணித்த கோத்தபாய அங்கு காவல்களை இறுக்குகின்றான், பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல கிறிஸ்தவர்களால் பிரபாகரன் வளர்ந்த வரலாறு அவனுக்கு தெரியும்
இதனால் வடபகுதியில் காவலை இறுக்குகின்றான்
அந்த கிறிஸ்தவ அலறல் சத்தமே இங்கு வைகோ, திருமா, முக ஸ்டாலின், சைமன், திருமுருகன் காந்தி மற்றும் கம்யூனிஸ்டுகள் மூலம் இங்கு எதிரொலிக்கின்றது
இதை கேட்க செவியுள்ளவன் கேட்கட்டும், புரிந்து கொள்ள முடிபவன் புரிந்துகொள்ளட்டும்