மறுபடியும் உச்சநீதிமன்ற ஆலமரத்தடியில் காத்திருந்தார்கள்

இன்று அப்பாவு என்பவரும் இன்பதுரை என்பவரும் மறுபடியும் உச்சநீதிமன்ற ஆலமரத்தடியில் காத்திருந்தார்கள், சமுக்காளம் விரித்து அமர்ந்த நீதிபதிகள் வழக்கு டிசம்பர் 11 வரை ஒத்திவைக்கபடுகின்றது என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்

குறிப்பிட்ட ஆசிரியர்களின் வாக்கு பற்றிய சர்ச்சையில் விசாரணை நடத்துகின்றது நீதிமன்றம், அதில்தான் இழுபறி நடக்கின்றது

இனி டிசம்பர் 11ல் என்ன சொல்வார்கள்? டிசம்பர் 21 வரை வழக்கு ஒத்திவைக்கபடுகின்றது என சொல்வார்கள் அவ்வளவுதான்

இவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள் என்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையினை சந்தோஷமாக கொண்டாடமாட்டார்கள் போலிருக்கின்றது.