ஈழம் ஏன் நாசமாய் போனது

ஈழம் ஏன் நாசமாய் போனது என்பதற்கான விடை இனியும் எல்லோருக்கும் கிடைக்காமல் இருக்காது

அங்கும் திராவிட சித்தாந்தம் நுழைந்திருக்கின்றது, பின் எங்கிருந்து உருப்படும்? உருப்படாமல்தான் போகும்

அதை அடித்துவிரட்டிய இலங்கைக்கே இவ்வளவு அழிவு என்றால், வைத்து வணங்கும் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு அழிவு வந்திருக்கும்?

சரி, இலங்கையில் ஏது ஆரிய பார்ப்பானியம்?

சிங்களன் பார்ப்பான் இல்லை இந்துமதமும் இல்லை அவன் ஆரியனுமில்லை

பின்பு ஏன் அங்கு திராவிட கழகம்?

இலங்கை என்பது தென்னாட்டு பூமி சாயல் அதாவது திராவிட பூமி, அங்கு யாரை எதிர்த்து திராவிட கழகம்? திராவிடனை திராவிடனே எதிர்த்து ஒரு கழகமா?

ஏதோ திராவிடம் என்பது “Jack Daniel” சரக்கு போல செல்லும் இடமெல்லாம் அதை கொண்டு சென்று போதை ஏற்றி மகிழ்வதில் சிலருக்கு ஒரு போதை சுகம் இருக்கும் போலிருக்கின்றது

போதையில் வம்பிழுத்தால் என்னாகும்? அடிதான் விழும்