திமுக எதிர்க்கின்றதென்றால் ஒரு ஆட்சி நல்லாட்சி என்பதை தவிர வேறு எப்படி இருக்க முடியும்?
திமுக கோஷ்டிகள் எதை எல்லாம் கரித்து கொட்டுகின்றதோ அதெல்லாம் நல்ல விஷயம் என பின்னாளில் உலகம் புரிந்துகொள்ளும்
காமராஜரையும், பக்தவத்சலத்தையும் எப்படி எல்லாம் வாரி தூற்றினார்கள்? கொஞ்சமா பேசினார்கள்?
நாடு சீரழிவதாகவும், அய்யகோ இனி தமிழனுக்கு எதிர்காலமில்லை என என்ன ஆட்டம் ஆடினார்கள்?
அவை எல்லாம் பொய் என பிற்காலம் சொன்னது, அட படுபாவிகளா இப்படி எல்லாமா அள்ளி விட்டு அரசியல் செய்தீர்கள் என இன்று திமுகவினரின் பித்தலாட்டத்தை உலகம் உணர்ந்துகொண்டது
அப்படி இன்று மோடி ஆட்சியினை படு மட்டமாக விமர்சிக்கின்றார்கள், பிரிதொரு நாள் இவர்கள் சொல்வதெல்லாம் மகா பொய் என்பதை காட்டும்
நிச்சயம் காட்டும் அதை உலகம் காணத்தான் போகின்றது
காமராஜரை பின்னாளில் உணர்ந்து கண்ணீர்விடுவதை போல மோடி காலத்தையும் பின்னொரு நாளில் இத்தேசம் உணரும்
திமுக எதிர்க்கின்றதென்றால் ஒரு ஆட்சி நல்லாட்சி என்பதை தவிர வேறு எப்படி இருக்க முடியும்?