பாரதம் ஒரு போதும் தோற்காது

கார்கிலில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு கடும் பயிற்சி கொடுத்து இந்திய பாராளுமன்றத்தை கைபற்ற அனுப்பியது

காந்தகாரில் ஒப்படைக்கபட்ட மசூத் அசாரின் திட்டமும் இதில் இருந்தது, ஆனால் லஷ்கர் இயக்கம் வந்தது

2001 இதே நாளில் 5 தீவிரவாதிகள் பாராளுமன்றத்தில் காவலர் உடையில் புகுந்தார்கள், அன்றைய உள்துறை அமைச்சர் அத்வாணி அவர்களின் குறியாக இருந்தார்

வழக்கம் போல, ஆம் வழக்கம் போல ஏதோ பிரச்சினையில் வெளிநடப்பு செய்த கட்சிகள் ஆங்காங்கே நின்றன, 40 நிமிடத்துக்கு இரு சபைகளும் ஒத்திவைக்கபட்டன‌

தீவிரவாதிகள் அன்றைய துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்தின் காரில் மோதியபடி தாக்குதலை கையெறி குண்டு உட்பட தாக்குதலை தொடங்கினார்கள் சண்டாளர்கள்

அவர்களின் இலக்கு அத்வாணியினை கொல்வதும், பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு பலத்த அதிர்ச்சியினை கொடுப்பதுமாகும்

ஆனால் நம் காவலர்கள் வெகு திறமையாக சமாளிக்க, ஒரு கட்டத்தில் 5 பேரையும் சுட்டு தள்ளினர்

எனினும் 9 வீரர்களை நாம் இழந்தோம்

பெரும் பரபரப்பான அந்த காட்சிகள் இந்நாடு மாபெரும் அச்சத்தை கடந்த நொடிகள் அவை

இந்திய வரலாற்றில் மகா கொடிய முயற்சி அது, அதன் பின் பாராளுமன்றத்தில் பாதுகாவல்கள் பலபடுத்தபட்டன, ஆயினும் தேச விரோதிகள் காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் எம்பிக்கள் என்ற பெயரில் ஆயுதமின்றி நுழைகின்றன‌

அந்த கொடும் தாக்குதலில் பலியான 9 வீரர்களுக்கும் வீரவணக்கம்

பாரதம் ஒரு போதும் தோற்காது