கண்ணதாசன் ஒரு தெய்வீக கவிஞன்

கண்ணதாசன் ஒரு தெய்வீக கவிஞன், கண்ணணை வணங்கியதால் என்னவோ அவன் சொன்னதெல்லாம் பலித்தது

எத்தனையோ பேருக்கு அவன் வாக்கு பலித்தது, அம்மனிதன் கடைசி காலங்களில் சித்தனின் சாயலாய் இருந்தான்

ரஜினிக்கு ஒரு படத்தில் எழுதினான்,

“ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்யம் இல்லை ஆள..
ஒரு ராணியுமில்லை வாழ‌
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகின்றேன் நாளும்”

ரஜினியின் தொடக்க கால போராட்ட வாழ்க்கை அப்படித்தான் இருந்தது, அவர் படாத பாடு இல்லை, சந்திக்காத சிரமம் இல்லை.

அவர் என்ன ஆகபோகின்றார் என்பது அவருக்கே தெரியா இருட்டான காலம் அது.

அந்த வரிகளில் அவரின் சோக காலங்களெல்லாம் வரும்

அந்த பாடலில் பெண் குரல் அவருக்கு ஆறுதலாக வரும் சாட்சாத் அது தெய்வத்தின் குரல்

“மயக்கமும் ஏனோ, கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு

ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு”

அன்றே ஆறுதலகாவும் தீர்க்கதரிசனமாகவும் ரஜினிக்கு அந்த வரிகள் அமைந்திருக்கின்றன..