நிர்மலா சீத்தாராமன் தன்னால் முடிந்ததை தேசத்துக்கு செய்கின்றார்

நிர்மலா சீத்தாராமன் தன்னால் முடிந்ததை தேசத்துக்கு செய்கின்றார், சீன பொருளாதாரமே 30% சரிந்த நிலையில் கிடக்கும் உலகநிலையில் இத்தேசத்துக்கு எதை செய்யமுடியுமோ அதை நலம்பட திறமபட செய்கின்றார்

ஒன்று நினைவில் வையுங்கள்

அந்த பதவி ஒன்று நிரந்தரம் அல்ல, ஆட்சிமாறும் பொழுது அவர் அதைவிட்டு நீங்கிவிடுவார்

ஆனால் அதற்கு பின் எவன் வந்தாலும் அப்பதவியில் அவர் இருந்தபொழுது தன் மகனுக்கு சம்பாதிக்க முறைகேடாக வழிவிட்டார் என்றும், தன் குடும்பத்தார் கண்ட பெண்களோடு தனி தீவில் சொத்துகுவிக்க வழிசெய்தார் என்றும் விரலை நீட்டிவிட முடியாது

அவர் குடும்பத்தார் வருமானமே இல்லாமல் எஸ்டேட் வாங்கினார்கள், திரைபடம் தயாரித்தார்கள் என ஒரு பயலும் கை நீட்டிவிட முடியாது

அவரால் பலன்பெற்றார் என அவரின் ரத்தம் சொந்தம் ஒருவரை சிறையில் தள்ளிவிடமுடியாது

கொட்டி கொடுத்த பதவியின் கணக்கு வழக்கினை அப்படியே வைத்திருக்கின்றாள் அந்த அருமை திருமகள், அதை கொடிய எதிரியும் மறுக்க முடியாது

முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் கட்சி தலைவனின் பினாமியும் மகளும் ஊழல் சிறையில் இருந்ததை எல்லாம் அப்படியே மறந்துவிட்டு நிர்மலாவினை கலாய்ப்பவனை நினைத்தால் பரிதாபமே மிஞ்சுகின்றது

தமிழன் என்பவன் அப்படித்தான்