நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யபட்டிருக்கின்றார்
பிரபல தீவிரவாதி நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யபட்டிருக்கின்றார்
இந்நிலையில் கன்னியாகுமரி செக்போஸ்டில் காவலர் சுட்டு கொல்லபட்டது ஐ.எஸ் தீவிரவாதிகளோடு தொடர்புடையவர்கள் செய்திருக்கும் விஷயம் என செய்திகள் வர இந்திய உளவுதுறை சர்வதேச உளவுதுறைகளை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கின்றது
சர்வதேச உளவுதுறையோ உங்கள் நாட்டில் அமித்ஷாவினையே அசால்ட்டாக தூக்க திட்டமிட்ட டாண் நெல்லை கண்ணன் இருக்கும்பொழுது எம்மிடம் விசாரிப்பது ஏன் என சீறிவிட இந்திய உளவுதுறையின் ஞான கண்கள் திறக்கபட்டிருக்கின்றன.
ஆம் இனி இவரிடம் விசாரித்தாலே மும்பை குண்டுவெடிப்பு முதல் கன்னியாகுமரி படுகொலை வரை மர்மம் விலகும் என முடிவு செய்திருக்கின்றது இந்திய தரப்பு என்கின்றார்கள்
“தமிழ்பெரியவர்” என்ற பெயரில் இப்படி ஒரு தீவிரவாதி ஐம்பது ஆண்டுகாலம் எப்படி இருக்க முடிந்தது என லெபனானின் ஹிஸ்புல்லா, பாலஸ்தின ஹமாஸ் வரை வாய்பிளந்து நிற்கின்றார்களாம்
இப்படி உலக பிரபலமாகிவிட்டார் டாண், இவர் கதையினை வைத்து முருகதாஸும், அட்லியும், ஹரியும் கதை எழுதிகொண்டிருப்பதாக வேறு சில தகவல்கள்