ஏக அழிச்சாட்டியம்

பெரியார் இல்லாவிட்டால் நீ ஆடுமேய்ப்பாய், மீன் பிடிப்பாய், தக்காளி பறிப்பாய், படிப்பே பெரியார் கொடுத்தது, ஏ நன்றி கெட்டவனே அவர் இல்லை என்றால் ஏடு எடுத்திருப்பாயா? எழுதுகோல் பிடித்திருப்பாயா என ஏக அழிச்சாட்டியம்

இங்கே கல்வி என்ன பெரியார் காலத்திலா தொடங்கிற்று? வரலாறு தெரியாத மடையர்கள் என்னமோ சொல்கின்றார்கள்

இங்கு நவீன கல்வியினை தொடங்கி வைத்தது கிறிஸ்தவ மெஷினரிகள் 1700களிலே நாயக்க மன்னர்களிடம் அனுமதி பெற்று அவர்கள் கல்வி கொடுத்தார்கள்

முதலில் கொடுத்தது கத்தோலிக்கர்கள் குறிப்பாக இயேசு சபை துறவிகள், அதன் பின் பிரிவினை கிறிஸ்தவர்களும் தொடங்கினர்

சந்தேகமில்லை, அந்த கல்வியும் அதன் பின் மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு தாவுவதும் நடந்தது

இந்தியா இலங்கை என்ற இரு நாடுகளிலும் இது நடக்க சுதாரித்த இந்துக்கள் அன்றே அதாவது 1800களிலே கல்வி நிலையங்கள் தொடங்கினர்

இந்து பள்ளிகள், இந்து கல்லூரிகள் இப்படித்தான் தொடங்கின‌

ஆதீனங்களும் இன்னும் பல பெரும் இந்து தொழிலதிபரளும் அப்படி அள்ளி கொடுத்தனர்

நெல்லையில் பாரதி பணியாற்றிய இந்து கல்லூரி அன்றே இருந்தது, பெரியாரிடம் வரும் முன் அண்ணா படித்த பச்சையப்பா கல்லூரி அன்றே இருந்தது

இன்னும் ஏராளம்

வெள்ளையர் பள்ளி கல்வியில் நிற்க இந்துக்களோ பல்கலைகழகம் கல்லூரி என சென்றனர், பின்னர் மிஷினரிகளும் கல்லூரி தொடங்கினர்

சேவியர்ஸ், லயோலா என்ற கல்லூரிகள் இப்படி முளைத்தன‌

செட்டியார்களும், ஆதீனங்களும் கல்வி பணிக்கு அள்ளி கொடுத்தது கொஞ்சமல்ல..

அண்ணாமலை செட்டி, அழகப்ப செட்டி போன்றோரும், மதுரை, திருவாடுதுறை ஆதீனம் எல்லாம் அதில் முக்கியமானவை

இஸ்லாமியரில் பலரும் முன்வந்து கல்வி நிலையம் தொடங்கினர், வடக்கே அலிகார் முதல் இங்கும் ஏகபட்ட இஸ்லாமிய கல்வி நிலையங்கள் உருவாகின‌

இப்படி கிறிஸ்தவ மெஷினரிகளும், இந்து அமைப்பினரும் , இஸ்லாமியரில் பலரும்கல்வி கொடுத்தபொழுது பெரியார் பிறக்கவே இல்லை

பள்ளி கல்லூரி பெருகி கொண்டிருந்த காலத்தில் பெரியார் மஞ்சள் மண்டியில் கணக்கு எழுதிகொண்டு சம்பாதித்தார்

நீதிகட்சி பெரியாருக்கும் மூத்தது , அந்த நீதிகட்சியிலே தாழ்தத்தபட்டவன் பன்னீர்செல்வம் வழக்கறிஞராக இருந்து லண்டன் மாநாட்டில் பேசிய காட்சி எல்லாம் வரலாற்றில் இருக்கின்றது

பெரியாரா பன்னீர்செல்வம், பிட்டி தியாகராஜர், பனகல் அரசரை எல்லாம் படிக்க வைத்தார்?

அன்றே பள்ளிகள் இருந்தன‌

நெல்லையில் மட்டும் 150 ஆண்டுக்கு முந்தைய பள்ளிகள் ஏராளம, சிறிய கிராமான வடக்கன் குளத்திலே இருக்கின்றது

பச்சையப்பா கல்லூரி, யாழ்ப்பாண இந்து கல்லூரி இன்னும் இந்தியாவின் பல இந்து கல்லூரிகளுக்கு வயது பெரியாரை விட அதிகம்

இதெல்லாம் கடந்து சுதந்திர இந்தியாவில் கிராமம் எல்லாம் பள்ளி தொடங்கியவன் காமராஜர்

பெரியார் இல்லை என்றால் நான் படித்திருக்க முடியாது என சொல்லும் பதர்கள் எல்லாவற்றிற்கும் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன்

நான் படித்த நிறுவணம் எல்லாம் பெரியார் மஞ்சள் மண்டியில் கணக்கு எழுதி, காசியில் சுற்றிய காலத்திலே தொடங்கபட்டவை

பெரியாருக்கு முன்பே இங்கு கல்வி இருந்தது

சும்மா ராஜாஜி குலகல்வி அதை பெரியார் தடுத்தார் என்பதெல்லாம் வாக்கு அரசியல்., அரசியல் குப்பை பொய்கள்

பெரியாரிடம் வரும்பொழுதே அண்ணா இரு எம்.ஏ முடித்திருந்தார். பெரியார் படிக்க வைத்தாரா?

இன்னும் நீதிகட்சி பன்னீர்செல்வம் போல ஏகபட்ட தாழ்த்தபட்டவர்கள் பெரும் பிம்பமாக உருவானார்கள்

கருணாநிதி 7ம் வகுப்பில் பெயிலாகி பெரியாரிடம் ஓடியவர், அவர் படித்திருந்தால் நிச்சயம் படித்திருக்கலாம்

ஏன் கலாம் படிக்கவில்லையா? பெரியார்தான் படிக்க வைத்தாரா?

இங்கு திறமையும் தகுதியும் உள்ள தாழ்த்தபட்டவன் மேலே வர கல்வியும் இன்னபிற வாய்ப்பும அன்றே இருந்தன‌

அருள் எனும் தாழ்த்தபட்டவன் அன்றே ஐ.ஜி ஆகவில்லையா?

கலைதுறையில் தாழ்த்தபட்ட என்.எஸ்.கே கலைஞர் எல்லாம் சம்பாதிக்கவில்லையா? சாதி தடுத்ததா?

சும்மா பெரியார் இல்லாவிட்டால் மரமேறுவோம் , மீன்பிடிப்போம், கோழிமேய்ப்பொம் என்பவன் எல்லாம் இன்றும் கோழிமேய்க்க மட்டும் தகுதி உள்ளவன்

நீங்கள் இருக்கும் மாநிலத்தில் ஏன் டாஸ்மாக் பெருகாது? ஏன் ஏமாற்றுகாரன் ஆளமாட்டான், ஏன் மாநில கடன் 4 லட்சம் ஆகாது?

உங்கள் அறிவுக்கு பழனிச்சாமி ஆட்சி கவிழ்ந்தால்தான் ஆச்சரியம், நீடிப்பதில் ஆச்சரியமே இல்லை

சும்மா இருந்தால் பெரியார் இல்லாவிட்டால் ரயில் வந்திருக்காது, விமானம் பறந்திருக்காது, மொபைல் வந்திருக்காது, இணையம் வந்திருக்காது என கிளம்பி விடுவார்கள் போல