இந்த நன்றியினை மறந்தால் தமிழகம் உருப்படாமலே போகட்டும்
பெரியார் இல்லாவிட்டால் ஐடி தொழிலும் இல்லையாம், ஆம் சென்னையில் இத்தனையாயிரம் ஐடிதொழிலாளிகள் இருக்க பெரியார்தான் காரணமாம்
ஆக பில்கேட்ஸும், ஐபிஎம் போன்ற கம்பெனிகளும் , இந்த ஆப்பிள் நிறுவணர் ஸ்டீவ் ஜாப்ஸ் இன்னும் பலர் காரணமே அல்ல
முழு காரணம் பெரியார், ஈரோட்டு ராம்சாமி இந்துமதத்தையும், தமிழ் செய்யுளையும் புறந்தள்ளிவிட்டு 1930களிலே புரோகிராம் எழுதியிருக்கின்றார்
1935ல் அண்ணா துரையும் அவருடன் கருணாநிதியும் சேர்ந்து திராவிட புரோகிராம் எழுதியிருகின்றார்கள்
அந்நேரம் 1940களில் ஹிட்லரிடம் இருந்து உலகை காக்க கிளம்பிய அமெரிக்காவின் கண்ணில் இது பட்டுவிட்டது
முரசொலி, விடுதலை, திராவிட நாடு ஆகிய பத்திரிகைகளின் விஞ்ஞான பக்கங்களின் இருந்த ஆய்வுமுடிவுகளை அமெரிக்காவும் ஐரோப்பாவும் செயல்படுத்தின
அதில் கால்குலேட்டர், கணொபொறி என என்னவெல்லாமோ உருவாயின
அட தமிழனின் மூளை எவ்வளவு சிறந்தது, பாப்ர்பண பிராமணன் இதை எல்லாம் சூத்திரன் என அடக்கி வைத்திருக்கின்றான் என எண்ணிய நாசாவும் மைக்ரோசாப்டும் திமுகவினரை ஊக்குவித்தன
அண்ணா ஏல் பல்கலைகழத்தில் அன்றே இணைய பயன்பாட்டை சொன்னார், அதிலிருந்துதான் இண்டர்நெட் தோன்றிற்று
தொடர்ந்து திராவிட கருத்துக்களில் இருந்து அமெரிக்கா பல விஷயங்களை கொடுத்தது, முரசொலிமாறனின் அரிய முயற்சியில் செப்போன் உருவானது
ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபொழுதுதான் ஆப்ஸ் பற்றி சொல்லி அவை பிரபலமாயின
நெல்லுக்கு பாய்ந்த நீர் புல்லுக்கும் பாய்ந்து பெங்களூர் ஐதராபாத் போன்றவை கணிணி நகர்களாயின
ஒன்றா இரண்டா திராவிடதின் சாதனை?
சென்னையில் தமிழன் இருப்பது முதல் அங்கு கடலும் துறைமுகமும் விமான நிலையமும் ஆட்டோ நிலையமும் கூவமும் இருப்பது வரை எல்லாமே திராவிட சாதனையே
சென்னைக்கு கணிபொறி வந்து இணையம் வந்தது எல்லாமே அவர்கள் சாதனையே, அவர்கள் இல்லையென்றால் சென்னை அந்தமானின் சென்டில் தீவுபோல இருக்கும், தமிழன் ஆடையின்றி வில் அம்போடு சுற்றிகொண்டிருப்பான் அய்யகோ
இந்த நன்றியினை மறந்தால் தமிழகம் உருப்படாமலே போகட்டும்