லண்டனில் நடந்த சம்பவம் இன்றைய உலகின் ஒருமாதிரியான செய்தி
லண்டனில் நடந்த சம்பவம் இன்றைய உலகின் ஒருமாதிரியான செய்தி
லண்டனின் இளம்பெண், அதாவது தந்தையின்றி தாய்மட்டும் கொண்ட இளம்பெண் திருமணம் செய்து தேனிலவுக்கு சென்றிருக்கின்றாள், தனியாக இருந்ததால் தாயினையும் அழைத்து சென்றிருக்கின்றாள்
அடுத்த 9ம் மாதம் குழந்தை பிறந்திருகின்றது, அதுவும் அப்பெண்ணின் கணவனை போலவே பிறந்திருக்கின்றது
அதிர்ச்சி அடைந்த இளம்பெண் மயங்கி விழுந்து எழுந்து அழுதுகொண்டிருக்கின்றாள்
காரணம் பிள்ளை பெற்றது இளம்பெண் அல்ல அவளின் தாய்
அந்த ஜெகஜால கில்லாடி மாப்பிள்ளை இரு தேனிலவினை கொண்டாடியிருகின்றான்
விஷயம் ஐரோப்பாவில் சிரிப்பாய் சிரிக்கின்றது, அப்பெண்ணோ விவாகரத்துக்கு சென்றுவிட்டாள், அவனும் அவளின் தாயும் யார் பெற்றால் என்ன இது நம் வீட்டு வாரிசு என சிரித்து கொண்டிருக்கின்றார்கள்
விஷயம் சென்னை பெரியார் திடலுக்கு தெரியுமா இல்லையா என்பது தெரியவில்லை
தெரிந்தால் இந்த வருட பெரியார் ராம்சாமி விருது இந்த லண்டன்காரனுக்கும், ராம்சாமி கண்ட ராவிருட்டு புரட்சிபெண் விருது அவனின் மாமியாருக்கும் வழங்கபடும்..
பாலசந்தர் இருந்தால் அவருக்கொரு கதை கிடைத்திருக்கும், இப்போதுள்ள இயக்குநர்களுக்கு இம்மாதிரி கதையிலெல்லாம் விருப்பமில்லை