கொரோனா நேரம் விமானம் நிறுத்தபட்டதில் மகா சிக்கல்
உலக சுற்றுபயணிகளுக்கு மார்ச் 18ம் தேதிவரை சிக்கல் இல்லை, அதன்பின் காட்சிகள் மாறின, ஒவ்வொரு நாட்டு பயணியும் அந்நிய நாட்டில் சிக்கிகொண்டார்
இந்தியா போன்றவை அந்நிய நாட்டில் இருந்த பயணிகளை விமானம் மூலம் அழைத்து வந்தது
சில நாடுகளில் சர்ச்சை வந்தது அதாவது கல்வி, மருத்துவம், மத பயணம் என்றால் அரசு வரும் ஆனால் சுற்றுபயணிகள் சுற்றுலா நிறுவணங்களை நம்பி வந்தவை அல்லவா? இன்சூரன்ஸ் எல்லாம் கூட உண்டே அவர்கள் தங்கவோ உணவுக்கோ வழி செய்யலாம் அல்லவா என இழுபறி நிலவியது
இப்படி மலேசிய பயணிகள் இந்தியாவிலும் இந்திய பயணிகள் மலேசியாவிலும் சிக்கினர்
இருநாட்டு அதிகாரிகளும் பேசி தீர்த்தபின் இந்திய பயணிகளை ஏற்றிகொண்ட விமானம் இந்தியா வந்தது, இனி அது மலேசிய பயணிகளை சுமந்துகொண்டு தங்கள் தாயகம் வரும்
வெளிநாட்டில் சிக்கிகொண்ட ஒவ்வொரு அந்நியனுக்கும் ஒவ்வொரு வகை சிக்கல், சுற்றுலா சென்றவர்களுக்கு தனி சிக்கல்
ஆம் வேலை என்றால் சம்பந்தபட்ட நாடுகள் தாங்கும், மருத்துவம் என்றாலும் தாங்கும் ஆனால் சுற்றுலா பயணிகள் பணம் செலவழிக்க மட்டும் வருபவர்கள், தொடர்ந்து தங்க இடமோ பணமோ இருக்காது, அதுவும் கொரோனா நேரம் விமானம் நிறுத்தபட்டதில் மகா சிக்கல்.